'பணியிட மாறுதல் கலந்தாய்வில், மாற்றுத்திறனாளி ஆசிரியர்களின் முன்னுரிமை பறிக்கப்பட்டதற்கு, தீர்வு காணாவிட்டால், தொடர் போராட்டங்கள் நடத்தப்படும்' என, அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கம் அறிவித்துள்ளது.
தமிழக அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு, பணியிட மாறுதல் கலந்தாய்வு நடைபெற உள்ளது. இந்நிலையில், மாற்றுத்திறனாளி ஆசிரியர்களுக்கு, ஏற்கனவே இரண்டாம் நிலையில் இருந்த முன்னுரிமை வாய்ப்பு, சமீபத்திய அரசாணையால், ஆறாம் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
இது குறித்து, அனைத்து வகை மாற்று திறனாளிகள் சங்க மாநிலச் செயலர், நம்புராஜன் கூறிய தாவது:
ஆசிரியர்கள் பணியிட மாறுதல் கலந்தாய்வில், மாற்றுத்திறனாளி ஆசிரியர்களுக்கான முன்னுரிமையை பறிக்கும் வகையில், அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இது, ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக, வெளி மாவட்டங்களில் பணிபுரிந்து வரும், உடல் ஊனமுற்ற மாற்றுத்திறனாளி ஆசிரியர்களுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.இதை விடுத்து, முந்தைய நடைமுறையை பின்பற்ற வேண்டும் என, பள்ளிக்கல்வித் துறை முதன்மை செயலரிடம், வலியுறுத்தி உள்ளோம். தீர்வு கிடைக்காவிட்டால், மே, ௧௩ல் நடக்கும், எங்கள் சங்க மாநாட்டில் ஆலோசித்து, தொடர் போராட்டங்கள் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை