கோடை விடுமுறையில் அனைவருக்கும் இடைநிலைக் கல்வி இயக்கம், முதன்மை கருத்தாளர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கு ஆசிரியைகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
அனைவருக்கும் இடைநிலைக் கல்வி இயக்கம் சார்பில் கணிதம், அறிவியல் பாடங்களுக்கான முதன்மை கருத்தாளர்களுக்கான பயிற்சி மே, 8 முதல், 12 வரை நடக்கிறது. இதில், கணிதம், அறிவியல் பாடங்களுக்கு, வருவாய் மாவட்டத்தில் இருந்து ஒவ்வொரு பாடத்திற்கும் தலா, 50 பேர் தேர்வு செய்யப்பட்டு முதன்மை கருத்தாளர்களுக்கான பயிற்சி அளிக்கப்படுகிறது.
தென் மண்டலத்தில் கணித பாடத்திற்கு திண்டுக்கல், அறிவியல் பாடத்திற்கு திருச்சியில் உண்டு, உறைவிடப் பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சிக்குப் பின், முதன்மை கருத்தாளர்கள் அந்தந்த மாவட்ட ஆசிரியர்களுக்கு பயிற்சியளிப்பர். கோடை விடுமுறையில், ஐந்து நாட்கள் பயிற்சியளிக்கப்படுவதால் ஆசிரியர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
இதுகுறித்து ஆசிரியை ஒருவர் கூறியதாவது: கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் கூடாது எனக் கூறும் கல்வித்துறை, ஆசிரியர்களுக்கு மட்டும் பயிற்சி அளிக்கலாமா.
கோடை விடுமுறையில் பெண் ஆசிரியைகள் வெளிமாவட்டங்களுக்கு சென்று தங்குவதில் சிரமம் உள்ளது. கோடையில் பயிற்சி வகுப்பை கல்வித்துறை தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை