தனியார் பள்ளிகளை போல, அரசுப்பள்ளி மாணவர்களின் சீருடையும், ’பளீச்’ நிறத்தில், காட்சிக்கு அழகாக இருக்கும்படி, மாற்றம் செய்ய வேண்டுமென்ற கோரிக்கை வலுத்துள்ளது.
கோவை மாவட்டத்தில், 861 அரசு, அரசு உதவிபெறும், மாநகராட்சி, நகராட்சி, பஞ்சாயத்துக்குட்பட்ட தொடக்கப்பள்ளிகள் உள்ளன. இங்கு, ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும், மாணவியருக்கு மெரூன் நிறத்தில், பாவடை, சட்டையும், மாணவர்களுக்கு, கால்சட்டை, மேல்சட்டையும், சீருடையாக உள்ளது.
இதுதவிர, 261 நடுநிலைப்பள்ளிகள், 197 உயர்நிலை, மேல்நிலை பள்ளிகள் உள்ளன. இங்கு படிக்கும் மாணவிகளுக்கு, சுடிதாரும், மாணவர்களுக்கு, பேண்ட், சட்டையும் சீருடையாக அளிக்கப்படுகிறது.
ஆண்டுக்கு நான்கு ’செட்’ சீருடை வழங்கப்படுகிறது. இதை அணியும் ஒரு மாதத்திற்குள், ’வெளிரிய’ நிறத்தில், பழைய சீருடை போல காட்சியளிக்கிறது.
தனியார் பள்ளிகளில், காட்சிக்கு அழகாக இருக்கும் படியாக, கோடு, கட்டம் போட்ட சீருடை அளிக்கப்படுவதால், மாணவர்கள் தனித்தன்மையுடன் தெரிகின்றனர். இதைபோல, அரசுப்பள்ளி சீருடையிலும் மாற்றம் செய்ய வேண்டுமென்ற, கோரிக்கை வலுத்துள்ளது.
ஒருங்கிணைந்த பெற்றோர் மாணவர் நலசங்க மாநில பொதுசெயலாளர் சரவணவேல் கூறுகையில், ”அரசுப்பள்ளி மாணவர்களுக்கு விநியோகிக்கப்படும் சீருடை தரமற்றதாக உள்ளது. மற்றவர்களுடன் பழக, அரசுப்பள்ளி மாணவர்கள் தயங்குகின்றன.
எனவே, அடுத்த கல்வியாண்டு முதல், தரமான துணியில், தனியார் பள்ளி மாணவர்கள் அணிவது போல, புதுமையான டிசைன்களில், சீருடை அளித்தால், மாணவர்கள் பயனடைவர்,” என்றார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை