தமிழகத்தில் உள்ள பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவு மே 1ம் தேதி தொடங்கியது. மே 31ம் தேதியுடன் ஆன்லைன் பதிவு செய்வதற்கு மே 31ம் தேதி கடைசி நாளாகும். இந்நிலையில் கடந்த ஆண்டு பொறியியல் கட் ஆப் மதிப்பெண்கள் இணையதளத்தில் (https://www.tnea.ac.in/) பதிவேற்றம் செய்ய்ப்பட்டுள்ளது.
அந்த இணையதளத்தில் எந்த மாவட்டத்தில் மாணவர் படிக்க விரும்புகிறார் என்பதை தேர்வு செய்ய வேண்டும். அதைதொடர்ந்து அந்த மாவட்டத்தில் உள்ள கல்லூரிகள் பட்டியலிடப்படும். அதில் மாணவர் படிக்க விரும்பும் கல்லூரி, துறையை தேர்வு செய்ய வேண்டும்.
அதன்பின் சாதிவாரி இடஒதுக்கீட்டு பிரிவை தேர்வு செய்து உள்ளீடு செய்வதற்கான பட்டனை அழுத்தியதும், குறிப்பிட்ட கல்லூரியில் கடந்த ஆண்டு கட் ஆப் மதிப்பெண் கணினி திரையில் தெரியும். இதன்மூலம் கடந்த ஆண்டு கட் ஆப் மதிப்பெண்ணையும் தங்களின் கட் ஆப் மதிப்பெண்ணையும் மாணவர்கள் ஒப்பிட்டு பார்த்துக்கொள்ளலாம். இந்த ஆண்டு கட் ஆப் மதிப்பெண் அதிலிருந்து சற்று மாறுபடும் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை