'நீட்' நுழைவு தேர்வில், பிளஸ் 1, பிளஸ் 2 பாடங்களில், சம அளவுக்கு கேள்விகள் இடம் பெற்றிருந்தன. தேர்வுக்கு தயாரானவர்களுக்கு, வினாக்கள் எளிதாக இருந்தன. மருத்துவ படிப்புக்கான, 'நீட்' நுழைவு தேர்வு, நேற்று நடந்தது. இதில், நாடு முழுவதும், 11.35 லட்சம் பேர் எழுதினர்.
தமிழகத்தில், 88 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்தனர். தமிழகத்துக்கும், 'நீட்' தேர்வு கட்டாயம் என, அறிவிக்கப்பட்ட பின், நடக்கும் முதல் தேர்வு என்பதால், மாணவர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. வினாத்தாள் எளிமையாக இருந்ததாக, பெரும்பாலான, சென்னை மாணவர்கள் தெரிவித்தனர். பிற மாவட்ட மாணவர்களில், பலர் தேர்வு கடினமாக இருந்ததாக கூறினர்.
பிளஸ் 1, பிளஸ் 2 பாடங்களை புரிந்து படித்தும், பாடங்களை எழுதி பயிற்சி பெற்றவர்களுக்கு வினாத்தாள் எளிதாக இருந்தது. திடீரென, 'நீட்' தேர்வுக்கு விண்ணப்பித்து, எந்த பயிற்சியும் இல்லாதவர்களுக்கு, வினாத்தாள் கடினமாக இருந்தது. நேற்றைய வினாத்தாள், முந்தைய ஆண்டை விட எளிதாக இருந்த தாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
வினாத்தாள் குறித்து, போட்டி தேர்வுக்கு பயிற்சி அளிக்கும், 'டாப்பர்' நிறுவனத்தின் துணை தலைவர், ராஜசேகர் ராட்ரே கூறியதாவது: 'நீட்' தேர்வில், இயற்பியல், வேதியியலில் தலா, 45 கேள்விகள்; உயிரியலில், 90 கேள்விகள் இடம் பெற்றன. பிளஸ் 1, பிளஸ் 2 பாடங்களிலிருந்து, சம அளவில் கேள்விகள் இடம் பெற்றன.பெரும்பாலான கேள்விகள், சிந்தித்து, புரிந்து பதில் எழுதும் வகையில் இருந்தன. வேதியியல் கொஞ்சம் கடினமாக இருந்தது. வேதியியலில், 87வது கேள்விக்கு, 'ஆர்' பிரிவு கேள்விக்கு வழங்கப்பட்ட விடை குறிப்புகளில், சரியான விடை இல்லை. இந்த ஆண்டு, 720 மதிப்பெண்களுக்கு, 180 கேள்விகள் இடம்பெற்றன. 380 முதல், 410 மதிப்பெண் வரை, 'கட் ஆப்' வர வாய்ப்புஉள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மனப்பாட கல்வியால் கடினமான தேர்வு
தேர்வு எழுதிய மாணவர்கள் கூறுகையில், 'சமச்சீர் பாடத்திட்டத்தில் மனப்பாடம் செய்து, தேர்வுக்கு வந்ததால், கடினமாக இருந்தது. கேள்விகள் குழப்பமாக இருந்தன. பாடங்களை முழுமையாக படித்திருந்தால், எளிமையாக இருந்திருக்கும். வேதியியல், இயற்பியல் பாடங்களிலிருந்து கடினமான கேள்விகள் இடம் பெற்றன. சமச்சீர் பாடத்திட்டத்தில் படித்ததால், தேர்வில் இடம் பெற்ற கேள்விகளுக்கு பதில் அளிக்க திணறினோம்' என்றனர்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை