
*எண்ணி துணிக கருமம் துணிந்த பின் எண்ணுதல் என்பது இழுக்கு*
வெற்றி பாதையில் :
* வலி நிறைந்த பாதையில் இறுதி பாகம் வந்தாயிற்று
* இனி செய்ய வேண்டியது மனதை தயார் செய்தல்
* முடியும் என்ற எண்ணம் மனதில் விதையுங்கள்
* முடியாது என்ற பயத்தின் களை செடியை தூக்கி எரியுங்கள்
* உங்களது வாழ்வையே புரட்டி போடும் அரசு வேலை தயார்
* இறுதி நிமிடங்களை பொறுமையாக தெளிவாக கடந்து வாருங்கள்
* தேர்வு கடினமோ எனிமையோ அந்த நிலை அனைவருக்கும் சமமானதே. அதை பற்றி கவலை வேண்டாம்
* ஒதுக்கி வைத்த பாடங்களை / பகுதிகளை இவ்வாரத்தில் படியுங்கள்
* உங்கள் நம்பிக்கை உடைக்கும் கருத்து கூறுவோரிடம் இருந்து விலகி இருங்கள்
* கடைசி வாரம் முழுமையாக திருப்புதலில் செலவிடுங்கள்
* மாதிரி முழுமை தேர்வு எழுதுவது நலம். அதன் மதிப்பெண் பார்த்து மனமுடைவது மடைமை
* மனமே எண்ணம் இயற்றும். எண்ணமே செயலாகும். செயலே வெற்றியாகும்
* சலிப்பு வேண்டாம். சோர்வு வேண்டாம்.
* புத்தகத்தை எடுக்கும் போதே உற்சாகமூட்டி தொடங்கவும்
* உடல் நலம் பேணுதல் தற்போதைய நாட்களில் அவசியம்
* படித்தது தான் என விட்டு விடாமல் ஒரு முறையாவது திருப்புதல் செய்யுங்கள்
* செல்போன், இணையம் நேர விழுங்கிகள். தேவைக்கு மட்டும் பயன்படுத்தவும்
பயணம் வெற்றியோ தோல்வியோ முடிவு கையில் இல்லை. முடிவை முடிவு செய்யும் முயற்சி கையில் உள்ளது
வாழ்த்துகளுடன் பிரதீப்
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை