பாடத்திட்டம்,போதனா முறை, தரமான ஆசிரியர்கள் போதிய ஆசிரியர்கள் அடிப்படைக் கட்டமைப்பு தேர்வு சமூகப் பார்வையுடன் கூடிய கல்வி முறைகள் கண்காணிப்பு இன்ன பிற ஆகியனவே தரத்தை உறுதி செய்ய முடியும்.
தனியார் மருததுவக் கல்லூரிகளைக் கட்டுப்படுத்துவோம் எனக் கூறி அதற்கு முறையற்ற வகையில் அனுமதி வழங்கி பல்லாயிரம் கோடி சம்பாதித்த கேதன் பரேக் போன்றவர்கள் இருக்கும் வரை எப்படி தரமான மருத்துவக் கல்லூரிகள் வர முடியும்..
மருத்துவக் கல்லூரிகளை ஆரம்பிப்பது மருத்துவ மனைகளை ஆரம்பிப்பது மருத்துவர்களை நியமிப்பது என மாநில அரசே அனைத்தையும் செய்யும் போது மத்திய அரசிற்கு இதில் என்ன வேலை..
தர நிர்ணயம் என்ற பெயரில் மாநில அரசின் உரிமைகளில் தலையிடுவதும் அதனை தனதாக்கிக் கொள்ளும் மத்தியப் பேரரசின விரிவாக்கம என்பதில் என்ன சந்தேகம்.....
புதிய கல்விக் கொள்கையில் தர நிர்ணயம் என்ற பெயரில் பத்தாம் வகுப்பு முதல் பி.எச்டி வரை முடித்திருந்தாலு்ம் மத்திய அரசின் தேர்வு எழுதித் தீரவேண்டும் என்ற கட்டாய அகில இந்தியத் தேர்வு பரிந்துரைக்கப்பட்டுள்ளது உங்களுக்குத் தெரியுமா....
நீட் தேர்வு எழுதி மருத்துவக் கல்வி பயின்றாலும் படித்து முடித்த பின் பதிவு செய்தற்கும் மேற்படிப்புக்கும் ஒரு நுழைவுத் தேர்வு ஒன்று இருக்கிறது என்பது தெரியதா.....
தொடரும்...
(நன்றி.பேரா.இராஜமாணிக்கம்)
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை