தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமான, என்.சி.இ.ஆர்.டி., புத்தகங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்' என, தங்களின் இணைப்பில் உள்ள பள்ளிகளுக்கு, சி.பி.எஸ்.இ., கண்டிப்பான உத்தரவு பிறப்பித்துள்ளது.
மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., இணைப்பு பெற்ற பள்ளிகள், என்.சி.இ.ஆர்.டி., புத்தகங்களையே பயன்படுத்த வேண்டும் என்ற, விதிமுறைகள் உள்ளன. ஆனாலும், பெரும்பாலான பள்ளிகள், தனியார் புத்தக நிறுவனங்களின், பாட புத்தகங்களை பயன்படுத்தி வருகின்றன. இந்நிலையில், 'நியூ சரஸ்வதி புக் ஹவுஸ்' என்ற நிறுவனம், பிளஸ் 2 வகுப்புக்கு, உடற்கல்வி மற்றும் சுகாதாரம் என்ற புத்தகத்தை வெளியிட்டிருந்தது.
அதில், பெண்களின் உடல் அழகு எந்த அளவில் இருக்க வேண்டும், என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பாடம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.இதையடுத்து, 'அனைத்து பள்ளிகளும், என்.சி.இ.ஆர்.டி., புத்தகங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பள்ளிகள் இணைப்பு அங்கீகாரம் பெறும் போது, என்.சி.இ.ஆர்.டி., புத்தகங்களை மட்டுமே பயன்படுத்துவோம் என, உறுதி அளிக்க வேண்டும்' என, சி.பி.எஸ்.இ., வாரியம் கண்டிப்பான உத்தரவு பிறப்பித்து உள்ளது.
அதை மீறி, தனியார் புத்தகங்களையோ, பாடத்திட்டத்தை தாண்டி, வேறு புத்தகங்களையோ பயன்படுத்தினால், பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கவும், சி.பி.எஸ்.இ., வாரியம் திட்டமிட்டுள்ளது.
2,000 பள்ளிகளுக்கு 'நோட்டீஸ்'
சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் இணைந்த பள்ளிகள், தங்கள் வளாகத்திலும், வகுப்பறையிலும் என்னென்ன வசதிகளை கொண்டிருக்க வேண்டும் என்பதற்கு, விதிகள் உள்ளன. சி.பி.எஸ்.இ., இணைப்பு அங்கீகாரம் பெற விண்ணப்பிக்கும் போது, இந்த விதிகளை பின்பற்றுவோம் என, விண்ணப்ப படிவத்தில், பள்ளிகள் உறுதி மொழி அளிக்க வேண்டும்.
அத்துடன், பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகள் தொடர்பாக, 150 வகையான விபரங்களை பட்டியலிட வேண்டும். ஆனால், பல பள்ளிகள் இதைப் பின்பற்றவில்லை. அதனால், உள்கட்டமைப்பு தகவல்களை வெளியிடாத, 2,000 பள்ளிகளுக்கு, தலா, 50 ஆயிரம் அபராதம் விதித்ததோடு, அந்த தொகையை செலுத்தி விளக்கம் அளிக்கும்படி, பள்ளிகளுக்கு, சி.பி.எஸ்.இ., வாரியம், 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது.
மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., இணைப்பு பெற்ற பள்ளிகள், என்.சி.இ.ஆர்.டி., புத்தகங்களையே பயன்படுத்த வேண்டும் என்ற, விதிமுறைகள் உள்ளன. ஆனாலும், பெரும்பாலான பள்ளிகள், தனியார் புத்தக நிறுவனங்களின், பாட புத்தகங்களை பயன்படுத்தி வருகின்றன. இந்நிலையில், 'நியூ சரஸ்வதி புக் ஹவுஸ்' என்ற நிறுவனம், பிளஸ் 2 வகுப்புக்கு, உடற்கல்வி மற்றும் சுகாதாரம் என்ற புத்தகத்தை வெளியிட்டிருந்தது.
அதில், பெண்களின் உடல் அழகு எந்த அளவில் இருக்க வேண்டும், என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பாடம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.இதையடுத்து, 'அனைத்து பள்ளிகளும், என்.சி.இ.ஆர்.டி., புத்தகங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பள்ளிகள் இணைப்பு அங்கீகாரம் பெறும் போது, என்.சி.இ.ஆர்.டி., புத்தகங்களை மட்டுமே பயன்படுத்துவோம் என, உறுதி அளிக்க வேண்டும்' என, சி.பி.எஸ்.இ., வாரியம் கண்டிப்பான உத்தரவு பிறப்பித்து உள்ளது.
அதை மீறி, தனியார் புத்தகங்களையோ, பாடத்திட்டத்தை தாண்டி, வேறு புத்தகங்களையோ பயன்படுத்தினால், பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கவும், சி.பி.எஸ்.இ., வாரியம் திட்டமிட்டுள்ளது.
2,000 பள்ளிகளுக்கு 'நோட்டீஸ்'
சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் இணைந்த பள்ளிகள், தங்கள் வளாகத்திலும், வகுப்பறையிலும் என்னென்ன வசதிகளை கொண்டிருக்க வேண்டும் என்பதற்கு, விதிகள் உள்ளன. சி.பி.எஸ்.இ., இணைப்பு அங்கீகாரம் பெற விண்ணப்பிக்கும் போது, இந்த விதிகளை பின்பற்றுவோம் என, விண்ணப்ப படிவத்தில், பள்ளிகள் உறுதி மொழி அளிக்க வேண்டும்.
அத்துடன், பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகள் தொடர்பாக, 150 வகையான விபரங்களை பட்டியலிட வேண்டும். ஆனால், பல பள்ளிகள் இதைப் பின்பற்றவில்லை. அதனால், உள்கட்டமைப்பு தகவல்களை வெளியிடாத, 2,000 பள்ளிகளுக்கு, தலா, 50 ஆயிரம் அபராதம் விதித்ததோடு, அந்த தொகையை செலுத்தி விளக்கம் அளிக்கும்படி, பள்ளிகளுக்கு, சி.பி.எஸ்.இ., வாரியம், 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது.
1 Comments
Kuchi Jewels is a project of Gem & Gems which is a leading exporter since 2005 to onwards in all over the world. Our company has experienced, educated and motivated staff. Our main goal is to meet the international standard B2C and B2B export target with competitive prices and high quality products. initial necklace chile , initial necklace germany
ReplyDeleteஅனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை