குன்னுார் பஸ் நிலையம் அருகே, மவுன்ட் ரோடு பகுதியில், புதிதாக டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, பள்ளி மாணவியர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
நீலகிரி மாவட்டம், குன்னுார் மவுன்ட் ரோடு பகுதியில், நகராட்சி அலுவலகம், அரசு மருத்துவமனை, பெரிய பள்ளிவாசல், மாரியம்மன் கோவில் உட்பட பல வழிபாட்டு தலங்களும், கல்வி நிறுவனங்களும் உள்ளன.இந்நிலையில், பிரதான சாலையில், மதுக்கடை வைக்க, இரவோடு
இரவாக, டாஸ்மாக் நிர்வாகம் பணிகளை மேற்கொண்டுள்ளது. இதை கண்டித்து, அப்பகுதி பெண்கள் நேற்று காலை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களுக்கு ஆதரவாக, பள்ளி
மாணவியர், 1500 பேர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.போலீசார், பொதுமக்களிடம் பேச்சு நடத்தினர். இருப்பினும், மக்கள் அங்கிருந்து கலைந்து செல்லவில்லை. 'இந்த பிரச்னைக்கு, உரிய தீர்வு கிடைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்' என, அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதனால், இரண்டு மணி நேர நடந்த போராட்டம் கைவிடப்பட்டது.
நீலகிரி மாவட்டம், குன்னுார் மவுன்ட் ரோடு பகுதியில், நகராட்சி அலுவலகம், அரசு மருத்துவமனை, பெரிய பள்ளிவாசல், மாரியம்மன் கோவில் உட்பட பல வழிபாட்டு தலங்களும், கல்வி நிறுவனங்களும் உள்ளன.இந்நிலையில், பிரதான சாலையில், மதுக்கடை வைக்க, இரவோடு
இரவாக, டாஸ்மாக் நிர்வாகம் பணிகளை மேற்கொண்டுள்ளது. இதை கண்டித்து, அப்பகுதி பெண்கள் நேற்று காலை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களுக்கு ஆதரவாக, பள்ளி
மாணவியர், 1500 பேர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.போலீசார், பொதுமக்களிடம் பேச்சு நடத்தினர். இருப்பினும், மக்கள் அங்கிருந்து கலைந்து செல்லவில்லை. 'இந்த பிரச்னைக்கு, உரிய தீர்வு கிடைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்' என, அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதனால், இரண்டு மணி நேர நடந்த போராட்டம் கைவிடப்பட்டது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை