Ad Code

Responsive Advertisement

சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் ஹிந்தி மொழி கட்டாயம் : மத்திய அரசுக்கு ஜனாதிபதி பரிந்துரை

கேந்திரிய வித்யாலயா மற்றும் தனியார், சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், ஹிந்தி மொழியை கட்டாயமாக்க, ஜனாதிபதி, பிரணாப் முகர்ஜி பரிந்துரைத்துள்ளார்.

சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், மூன்று மொழி கொள்கை பின்பற்றப்படுகிறது. மாநில மொழி, ஆங்கிலம் மற்றும் ஹிந்தி போன்ற பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. சில மாநிலங்களில், ஆங்கிலத்துடன், சமஸ்கிருதமும், சில மாநிலங்களில், ஆங்கிலத்துடன் அந்தந்த மாநில மொழியும் கற்பிக்கப்படுகிறது.
இதற்கிடையே, 'அனைத்து, சி.பி.எஸ்.இ., பள்ளிகளிலும், எட்டாம் வகுப்பு வரை, ஹிந்தியை கட்டாயம் ஆக்க வேண்டும்' என, உச்சநீதிமன்றத்தில், மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், 'அனைத்து, சி.பி.எஸ்.இ., பள்ளிகளிலும், பத்தாம் வகுப்பு வரை, ஹிந்தியை கட்டாயமாக்க வேண்டும்' என, மத்திய அரசுக்கு, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பரிந்துரைத்துள்ளார். மேலும், இதுகுறித்து, மாநிலங்களுடன் பேசி, கொள்கை முடிவு எடுக்கவும், அவர் அறிவுறுத்தி உள்ளார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement