Ad Code

Responsive Advertisement

சென்னை பல்கலை 'அட்மிஷன்' மே 15 வரை அவகாசம்.


சென்னைப் பல்கலையின் தொலைநிலை கல்வியில், மாணவர் சேர்க்கைக்கான அவகாசம், மே, ௧௫ வரை, நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, சென்னைப் பல்கலையின் பொறுப்பு பதிவாளர், கருணாநிதி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சென்னைப் பல்கலையின் தொலைநிலை கல்வியில், இளநிலை, முதுநிலை படிப்புகளில், மாணவர்கள் சேருவதற்கான அவகாசம், மே, 15 வரை நீட்டிக்கப் பட்டுள்ளது. சனி மற்றும் ஞாயிறு அன்றும், பல்கலையின் ஒற்றை சாளர மாணவர் சேர்க்கை மையம் செயல்படும். ஆன்லைனிலும், மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சென்னைப் பல்கலை அனுமதியுடன் இயங்கும் கல்வி மையங்கள், நேரடி சேர்க்கை மையங்கள் மூலமும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விபரங்களை, www.ideunom.ac.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement