கிருஷ்ணகிரி: 'தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும், வரும் கல்வியாண்டு முதல், கணினி அறிவியல் பாடத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்' என, தமிழ்நாடு பி.எட்., கணினி அறியவில் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தினர், கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
இதுகுறித்து சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஸ்வர்ணராணி மற்றும் நிர்வாகிகள், கலெக்டர் கதிரவனிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில், 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பி.எட்., கணினி அறிவியல் பட்டதாரிகள், வேலையின்றி தவித்து வருகின்றனர். இவர்களின் வாழ்வாதாரத்தை காக்க, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும், ஒன்றாம் வகுப்பு முதல், பத்தாம் வகுப்பு வரை கணினி அறிவியல் பாடத்தை, வரும் கல்வியாண்டு முதல் நடைமுறைப்படுத்த வேண்டும். இதன் மூலம், வேலையில்லா கணினி பி.எட்., ஆசிரியர்களுக்கு, வேலை வாய்ப்பு கிடைக்கும். சமச்சீர் கல்வியில் கொண்டு வந்த கணினி அறிவியல் பாடத்தை, மீண்டும் நடைமுறைப்படுத்தி, அதற்காக அச்சிடப்பட்ட பாட புத்தகங்களை, மாணவர்களுக்கு வழங்க வேண்டும். கடந்த, 2006ல் இருந்து புதிதாக தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப்பள்ளியில், கணினி அறிவியல் பாடப்பிரிவுகளை கொண்டு வந்து, அங்கு கணினி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். அரசு மேல்நிலைப்பள்ளியில், காலியாக உள்ள கணினி ஆசிரியர் பணியிடங்ளை, மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப நிரப்ப வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது..
நன்றி:தினமலர்
வெ.குமரேசன்
மாநிலப் பொதுச் செயலாளர் ,
9626545446,
தமிழ்நாடு பி.எட்., கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரிகள் சங்கம்
© பதிவு எண் : 655/2014
இதுகுறித்து சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஸ்வர்ணராணி மற்றும் நிர்வாகிகள், கலெக்டர் கதிரவனிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில், 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பி.எட்., கணினி அறிவியல் பட்டதாரிகள், வேலையின்றி தவித்து வருகின்றனர். இவர்களின் வாழ்வாதாரத்தை காக்க, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும், ஒன்றாம் வகுப்பு முதல், பத்தாம் வகுப்பு வரை கணினி அறிவியல் பாடத்தை, வரும் கல்வியாண்டு முதல் நடைமுறைப்படுத்த வேண்டும். இதன் மூலம், வேலையில்லா கணினி பி.எட்., ஆசிரியர்களுக்கு, வேலை வாய்ப்பு கிடைக்கும். சமச்சீர் கல்வியில் கொண்டு வந்த கணினி அறிவியல் பாடத்தை, மீண்டும் நடைமுறைப்படுத்தி, அதற்காக அச்சிடப்பட்ட பாட புத்தகங்களை, மாணவர்களுக்கு வழங்க வேண்டும். கடந்த, 2006ல் இருந்து புதிதாக தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப்பள்ளியில், கணினி அறிவியல் பாடப்பிரிவுகளை கொண்டு வந்து, அங்கு கணினி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். அரசு மேல்நிலைப்பள்ளியில், காலியாக உள்ள கணினி ஆசிரியர் பணியிடங்ளை, மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப நிரப்ப வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது..
நன்றி:தினமலர்
வெ.குமரேசன்
மாநிலப் பொதுச் செயலாளர் ,
9626545446,
தமிழ்நாடு பி.எட்., கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரிகள் சங்கம்
© பதிவு எண் : 655/2014
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை