அரசு துறை இணையதளங்களை மாநில அரசுகள் 'அப்டேட்' செய்வதில்லை. இதனால் காலாவதியான தகவல்களே இடம்பெற்றுள்ளன. இதையடுத்து இணையதளங்களை நவீனப்படுத்தி, அடிக்கடி 'அப்டேட்' செய்ய வேண்டுமென, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி பள்ளிக்கல்வித்துறைக்கு அனைத்து சிறப்பு அம்சங்களுடன் கூடிய தனி இணையதளம் துவங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மாவட்ட வாரியாக அனைத்து வித பள்ளிகளின் தகவல்களும் இடம்பெற உள்ளன. இதில் பள்ளிகளின் வரலாற்று சிறப்பு, விளையாட்டு சாதனை, தேர்ச்சி விகிதம், இதர சாதனைகள், இலக்கியம் போன்றவை இடம் பெறும். மேலும் அதுதொடர்பான படங்கள், வீடியோ தொகுப்புகளும் இருக்கும். இப்பணிகளில் முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.
கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: பல அரசு பள்ளிகள் தனியாருக்கு இணையாக உள்ளன. அப்பள்ளிகளின் பெருமைகள், மாணவர்களின் சாதனைகளை இணையதளத்தில் வெளியிடும்போது, மற்ற பள்ளிகளும் மாற வாய்ப்புள்ளது. மக்களிடம் அரசு பள்ளி மீதான தவறான கண்ணோட்டம் குறையும், என்றார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை