ஆசிரியர் தகுதித் தேர்வு (டெட்) பணியில், தகுதி குறைவான பணி ஒதுக்கீடு செய்துள்ளதால், தேர்வுப் பணியை புறக்கணிப்பதாக தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் கழகம் அறிவித்துள்ளது.
ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் ஆசிரியர் தகுதித் தேர்வின் முதல் தாள் தேர்வு ஏப்.,29 அன்றும், 2ம்தாள் தேர்வு ஏப்.,30ம் தேதியும் நடக்கிறது.இத்தேர்வு பணியில் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் முதன்மை கண்காணிப்பாளர்களாகவும், உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூடுதல் முதன்மை கண்காணிப்பாளர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோல முதுநிலை ஆசிரியர்கள், துறை அலுவலர்கள் மற்றும் அறைக் கண்காணிப்பாளர்களாக ஆசிரியர் தேர்வு வாரியம் நியமித்து உத்தரவிட்டுள்ளது.
இதனால், தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் கழகம் ஆசிரியர் தகுதி தேர்வு பணிகளை முற்றிலும் புறக்கணிக்க வேண்டும், என மாநிலக்குழுக் கூட்டத்தில் முடிவு செய்துள்ளது.
சங்க மண்டலச் செயலாளர் கதிரேசன், மாவட்டத் தலைவர் சலேத்ராஜா கூறியதாவது:
அனுபவத்திலும், தகுதியிலும் குறைந்தவர்களுக்கு கீழ் பணி செய்ய அறிவுறுத்துவது எந்த நிலையிலும் ஏற்பதற்கு இல்லை. அதனால் சங்க கூட்டத்தில் 'டெட்' தேர்வை புறக்கணிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது, என்றார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை