Ad Code

Responsive Advertisement

வேலூர் மாவட்டம் அரக்கோணத்தில் ஏப்ரல் 22,23 தேதிகளில் "தரமான கல்விக்கான மாநிலக் கருத்தரங்கம்"

எங்கள் தேசம் : தரமான கல்விக்கான மாநிலக் கருத்தரங்கம்


வருகின்ற ஏப்ரல் 22,23 தேதிகளில் *எங்கள் தேசம் - எல்லோருக்குமான தேசம்* என்கிற அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைப்பின் தேசிய பிரச்சார இயக்கத்தின் ஒரு பகுதியாக தமிழ்நாடு  அறிவியல் இயக்கத்தின் சார்பில் *தரமான கல்விக்கான மாநிலக் கருத்தரங்கம்* வேலூர் மாவட்டம் அரக்கோணம் ஸ்ரீகிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் நடைபெறுகிறது..

கற்றல் உரிமைகள்...
குழந்தை உரிமைகள்..
கற்றல் அடைவுகள்..
தரமான கல்வி...
கல்வி சார்ந்த குறும்படங்கள்..
என பல தலைப்புகளில் இரண்டு நாள் நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டுள்ளன..

மாநிலம் முழுவதும் இருந்து மிகச்சிறந்த கல்விச் செயல்பாட்டாளர்களும் ஆசிரியர்களும் கல்வி ஆர்வலர்களும் பங்கேற்றுச் சிறப்பிக்க உள்ளனர்...

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் கற்றல் அடைவுகள் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முடிவுகளை மாவட்ட அளவில் தொகுத்து கொண்டு வருவது அவசியம்..
மாவட்டங்கள் சார்பாக அறிக்கை சமர்ப்பிக்க தனி அமர்வு முதல் நாள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது...

ஆர்வமுள்ள ஆசிரிய நண்பர்கள் பங்கேற்கலாம்..
அனுமதி இலவசம்..
முன்பதிவு அவசியம்..

நண்பர்களே..
நிகழ்ச்சி நடைபெறும் ஸ்ரீகிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி, திருத்தணி சாலையில்... அரக்கோணம் பேருந்து நிலையத்தில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது...

**சேலம், ஈரோடு வழியாக வரக்கூடிய நண்பர்கள் அரக்கோணத்தில் இறங்கி வரலாம்..

**விழுப்புரம் -திண்டிவனம்- காஞ்சிபுரம் வழியாக வரலாம்..
காஞ்சிபுரத்தில் இருந்து 1 மணி நேரம்..

**வேலூர் வந்து வரக்கூடிய நண்பர்கள் வேலூரில் இருந்து 2 மணி நேரத்தில் வரலாம்..

**சென்னையில் இருந்து 1 மணி நேரத்தில் வந்து விடலாம்..

*மேலும் விவரங்களுக்கு :*
நண்பர் ஜி.முனுசாமி, மாநிலச் செயலாளர்
📞9443048510

நண்பர். எஸ்.சுப்பிரமணி, மாநில ஒருங்கிணைப்பாளர்
📞 7598340424

நண்பர்.பூபாலன்
வேலூர் மாவட்டச் செயலாளர்
📞 9944274858

அன்புடன்
தேனி.சுந்தர் 
மாநிலச் செயலாளர்
தமிழ்நாடு அறிவியல் இயக்கம்
9488011128 / 9047140584
sundar.tnsf@gmail.com

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement