அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கு வருகிற21-ந்தேதி முதல் கோடை விடுமுறை விடப்படுகிறது என்று பள்ளிக்கல்வித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கோடை விடுமுறை
உயர்நிலைப்பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகள் வருகிற 20-ந்தேதிஇந்த கல்வி ஆண்டின் கடைசி வேலை நாளாகக் கொண்டுள்ளது.21-ந்தேதி முதல் பள்ளிகளுக்கு கோடை கால விடுமுறைவிடப்படுகிறது. தொடக்க கல்வித்துறையில் அரசுதொடக்கப்பள்ளிகள், அரசு நடுநிலைப்பள்ளிகள் மொத்தம் 33ஆயிரம் உள்ளன. இந்த பள்ளிகளில் உள்ள மாணவர்களுக்குதேர்வு முடிந்து வருகிற 28-ந்தேதி கடைசி வேலைநாளாக உள்ளது.இந்த பள்ளிகளுக்கு 29-ந்தேதி முதல் கோடை விடுமுறையாகும்.கோடை விடுமுறைக்கு பின்னர் வழக்கமாக ஜூன் 1-ந்தேதிபள்ளிகள் திறக்கப்படும். அன்றைய தினம் சனி அல்லதுஞாயிற்றுக்கிழமையாக இருந்தால் மறு நாள் திறக்கப்படும்.எனவே வருகிற கல்வி ஆண்டில் அனைத்து அரசு பள்ளிகளும்ஜூன் 1-ந்தேதி திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திறக்கும் தேதி தள்ளிப்போகுமா?
இந்தநிலையில் வெயிலின் தாக்கம் கடினமாக இருப்பதால்பள்ளிக்கூடங்கள் திறக்கும் தேதி தள்ளிப்போகுமா? என்றுஅதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள். பிளஸ்-1 வகுப்புகள்அனைத்தும் மாணவர் சேர்க்கை முடிந்த பின்னர் ஜூன்15-ந்தேதிக்கு பிறகு திறக்கப்படும். கோடை விடுமுறைக்குபின் பள்ளிகள் திறக்கும் தேதியும், பிளஸ்-1 வகுப்பு தொடங்கும்தேதியும் இன்னும் அறிவிக்கப்படவில்லை.இந்த தகவலை பள்ளிக்கல்வித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை