TET சிறப்பு கட்டுரை :
ஆசிரிய கனவுகளை கண்ணில் சுமந்து உழைப்பில் சேகரித்து வரும் நண்பர்களுக்கு... சிறு கருத்து பகிர்வு...
* எவ்வளவு நேரம் படிப்பிற்கு செலவிடுகிறோம் என்பதை விட எப்படி செலவிடுகிறோம் என்பதே வெற்றியை நிர்ணையிக்கிறது
* எனது முதல் கருத்தான்மை இணைய மெடிரியல் குவியலோடு மட்டும் பயனிப்பது வெற்று முயற்சி
* தற்போது தாங்கள் செய்ய வேண்டியது புத்தக வாசிப்பு . அதில் புரிதலும் அவசியம்.
* உங்களோடு போட்டியில் இருப்பவர்கள் பல லட்சம்
* எனவே உங்கள் இலக்கு 120 நோக்கி இருக்கட்டும்
எப்படி பெறலாம் ?
முதலில் பாட பகுதியை இரண்டாக பிரியுங்கள்
1. மனப்பாடம் செய்தல்
2. புரிதல் செயல்பாடு
பகுதி 1 ல் தமிழ், அறிவியல், ச.அறிவியல் பாடப்பகுதியை இணைக்கலாம்
பகுதி 2ல் கணிதம், உளவியல், ஆங்கிலம் இணைக்கலாம்
* பகுதி 1 : இதற்கு தாங்கள் செய்ய வேண்டியது வரி மீது விழி வைத்து தெளிவுற படித்தல்
* பகுதி 2 : பாடப்பகுதியை புரிந்து தொடர்புடைய வினாக்களை தேர்வில் கையாளுதல். இதற்கு பயிற்சி வினாக்கள் பலன் தரும்
கணிதம் பொறுத்தவரை 7 மற்றும் 8 வாழ்வியல் கணிதம் தலைப்புகளை சார்ந்த பயிற்சி கணக்குகளை முயற்சித்து கற்கவும்
மேலும் சுய தேர்வு, நினைவு கூர்தல் உக்தி, மனத்திறன், ஆழ்ந்து படித்தல் வெற்றியின் பாதைகள்
120 மதிப்பெண் சாத்தியமாகுமா?
நிச்சயம் சாத்தியம். திட்டமிட்டு பாட நிலைகளுக்கு ஏற்ப படித்தல் வெற்றியை தரும்.ஆங்கிலம், உளவியல் மதிப்பெண் நிர்ணையிக்கும் காரணிகள். எனவே அவற்றில் கவனம் தேவை.மேலும் ஆங்கிலம் தயார் படுத்துதலுக்கு பாட திட்டம் கொண்டு தலைப்பு வாரியாக பாட புத்தகத்தில் தயாரிப்பு செய்யுங்கள்.இங்கு தேவை திட்டமிட்ட முயற்சியே.
தோழர்கள் கனவு மெய்பட வாழ்த்துகளுடன்
- பிரதீப் ப.ஆ . _ வேலூர் (பூங்குளம்)
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை