தமிழக அரசு கடும் நிதி நெருக்கடியில் சிக்கி உள்ள நிலையில், 2017 - 18ம் ஆண்டுக்கான பட்ஜெட், சட்டசபையில், இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது.தமிழக அரசின் வருவாய், பல வகைகளில் குறைந்துள்ளதால், கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கு, நிதி ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அரசின் கடனும், ஆண்டுதோறும் அதிகரித்தபடி உள்ளது. கடனுக்கான வட்டித் தொகையும், அதிகரித்து வருகிறது. இவற்றை சமாளித்து, புதிய திட்டங்களை அறிவிக்க வேண்டும். கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், வரி இல்லாத பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
எனவே, இம்முறையும் வரி இல்லா பட்ஜெட் தாக்கல் செய்யப்படுமா அல்லது புதிய வரிகள் விதிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.இந்த சூழ்நிலையில், 2017 - 18ம் ஆண்டுக்கான பட்ஜெட், இன்று காலை, 10:30 மணிக்கு, சட்டசபையில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
புதிய முதல்வராக பழனிசாமி பொறுப்பேற்ற பின், முதன் முறையாக, இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. அதேபோல், நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள ஜெயகுமாருக்கும், இதுவே முதல் பட்ஜெட்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை