வரும் *01-04-2017* முதல், வருமான வரிச் சட்டத்தின் கீழ், சட்டப் பிரிவு 269STன் படி, நடைமுறைக்கு வரவுள்ள கட்டுப்பாடுகள்
குறித்த விளக்கம் கீழே...
*சட்டவிதி 269ST(a):*
ரூ.3 லட்சம் (அ) அதற்கும் மேல், ஒரு நாளில், ஒரே நபரிடமிருந்து, ஒரு விற்பனைப் பட்டியலுக்கோ (அ) பல பட்டியல்களுக்கோ ரொக்கமாகப் பணம் பெற்றால், மேற்படி விதியின் படி தண்டனைக்குரிய பரிவர்த்தனை ஆகும்.
*உதாரணம்:*
ஒரு வணிகர் (அதாவது *நீங்கள்*), ஒரு நாளில், ஒரே நபரிடமிருந்து, ஒரு விற்பனைப் பட்டியலுக்கோ (sale bill) அல்லது பல விற்பனைப் பட்டியல்களுக்காகவோ, ரூ.3,25,000/- ரொக்கமாகப் பெற்றால், தண்டம் (penalty) கட்டவேண்டும்.
*சட்டவிதி 269ST(b):*
ரூ.3 லட்சம் (அ) அதற்கும் மேல், ஒரு வி்ற்பனைப் பட்டியலுக்காக, ஒரே நபரிடமிருந்து, பல தவணைகளாக, பல நாட்களில், ரொக்கமாகப் பணம் பெற்றால், மேற்படி விதியின் படி தண்டனைக்குரிய பரிவர்த்தனை ஆகும்.
*உதாரணம்:*
ஒரு வணிகர் (அதாவது *நீங்கள்*), ஒருவருக்கு ரூ.4,00,000/- க்கு ஒரே விற்பனைப் பட்டியலாகப் போட்டு, ஒரு நாளுக்கு அதிகபட்சம் ரூ.10,000/- வீதம் பல தேதிகளில், ரூ.4,00,000/- ரொக்கமாகப் பெற்றால், தண்டம் (penalty) கட்டவேண்டும்.
*சட்டவிதி 269ST(c):*
ரூ.3 லட்சம் (அ) அதற்கும் மேல், பல பிரிவுகளில் பல்வேறு வகையிலான தொடர் விற்பனைப் பட்டியல்களுக்கு, ஒரே நபரிடமிருந்து, ஒரே தவணையாகவோ அல்லது பல தவணைகளாகவோ, ரொக்கமாகப் பணம் பெற்றால், மேற்படி விதியின் படி தண்டனைக்குரிய பரிவர்த்தனை ஆகும்.
*உதாரணம்:*
ஒரு வணிகர் (அதாவது *நீங்கள்*), ஒரு நபருக்கு, ரூ.1,50,000/- ற்கு சேலை/துணி விற்பனைப் பட்டியலாகவும், ரூ.1,30,000/-க்கு தறிக்கூலி பட்டியலாகவும், ரூ.1,20,000/- க்கு துணியில் கல் பதித்த கூலிப் பட்டியலாகவும் போட்டு, மொத்தமாகவோ அல்லது பல தவணைகளாகவோ ரூ.4,00,000/- ஐயும் ரொக்கமாகப் பெற்றால், தண்டம் (penalty) கட்டவேண்டும்.
இது அனைத்து வணிகப் பிரிவுகளுக்கும் பொருந்தும்.
*மிகமுக்கியகுறிப்பு*:
மேற்படி விதியின்படி, கட்டவேண்டிய தண்டத்தொகை எவ்வளவு தெரியுமா…?
100% (நூறு சதவிகிதம்)
அதாவது, நீங்கள் ரொக்கமாகப் பெற்ற தொகை *முழுவதையும்* அப்படியே அரசுக்கு செலுத்திவிட வேண்டும்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை