பல்கலை, கல்லுாரி உதவி பேராசிரியர் மாநில தகுதித் தேர்வு வினாத்தாளை ஆங்கிலத்துடன், தமிழிலும் வழங்க நடவடிக்கை கோரி தாக்கலான வழக்கில் 'டான்செட்'டிற்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
துாத்துக்குடி முடிவைத்தானேந்தல் சுடலைமுத்து தாக்கல் செய்த மனு: எம்.காம்.,-பி.எட்.,படித்துள்ளேன். துவக்கக் கல்வி முதல் பி.எட்.,வரை தமிழ் வழியில் படித்தேன். பல்கலை, கல்லுாரி உதவி பேராசிரியர் மாநில தகுதித் தேர்வை நடத்த, கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலையை, பல்கலை மானியக்குழு (யு.ஜி.சி.,) நியமித்துள்ளது. கடந்த ஆண்டு 16 மையங்களில், 26 பாடப் பிரிவுகளில் தேர்வு நடந்தது. தமிழ், ஆங்கில வழியில் வினாத்தாள் வழங்கப்பட்டது. இது தமிழ் வழியில் படித்தவர்களுக்கு உதவியாக இருந்தது. 2017 ல் நடக்க உள்ள தேர்விற்கு ஆன்லைனில் பிப்.,12 முதல் மார்ச் 12 வரை விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியானது. தேர்வு வினாத்தாள் ஆங்கிலத்தில் இருக்கும் என அறிவிப்பில் உள்ளது. இதனால் தமிழ் வழியில் படித்தவர்கள், வினாக்களை எளிதில் புரிந்து கொண்டு தேர்வு எழுத முடியாத நிலை ஏற்படும். அன்னை தெரசா மகளிர் பல்கலை பதிவாளர், டான்செட் உறுப்பினர் செயலரிடம் மனு அளித்தேன்.
தேர்வு அறிவிப்பிற்கு தடை விதிக்க வேண்டும். மாநில தகுதித் தேர்வு வினாத்தாளை 2016 போல் ஆங்கிலம், தமிழில் வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு சுடலைமுத்து மனு செய்திருந்தார்.நீதிபதி வி.பார்த்திபன் விசாரித்தார்.பல்கலை பதிவாளர், டான்செட் உறுப்பினர் செயலருக்கு நோட்டீஸ் அனுப்பி, மார்ச் 14 க்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
துாத்துக்குடி முடிவைத்தானேந்தல் சுடலைமுத்து தாக்கல் செய்த மனு: எம்.காம்.,-பி.எட்.,படித்துள்ளேன். துவக்கக் கல்வி முதல் பி.எட்.,வரை தமிழ் வழியில் படித்தேன். பல்கலை, கல்லுாரி உதவி பேராசிரியர் மாநில தகுதித் தேர்வை நடத்த, கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலையை, பல்கலை மானியக்குழு (யு.ஜி.சி.,) நியமித்துள்ளது. கடந்த ஆண்டு 16 மையங்களில், 26 பாடப் பிரிவுகளில் தேர்வு நடந்தது. தமிழ், ஆங்கில வழியில் வினாத்தாள் வழங்கப்பட்டது. இது தமிழ் வழியில் படித்தவர்களுக்கு உதவியாக இருந்தது. 2017 ல் நடக்க உள்ள தேர்விற்கு ஆன்லைனில் பிப்.,12 முதல் மார்ச் 12 வரை விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியானது. தேர்வு வினாத்தாள் ஆங்கிலத்தில் இருக்கும் என அறிவிப்பில் உள்ளது. இதனால் தமிழ் வழியில் படித்தவர்கள், வினாக்களை எளிதில் புரிந்து கொண்டு தேர்வு எழுத முடியாத நிலை ஏற்படும். அன்னை தெரசா மகளிர் பல்கலை பதிவாளர், டான்செட் உறுப்பினர் செயலரிடம் மனு அளித்தேன்.
தேர்வு அறிவிப்பிற்கு தடை விதிக்க வேண்டும். மாநில தகுதித் தேர்வு வினாத்தாளை 2016 போல் ஆங்கிலம், தமிழில் வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு சுடலைமுத்து மனு செய்திருந்தார்.நீதிபதி வி.பார்த்திபன் விசாரித்தார்.பல்கலை பதிவாளர், டான்செட் உறுப்பினர் செயலருக்கு நோட்டீஸ் அனுப்பி, மார்ச் 14 க்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை