ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு முதன்முறையாக அதிமுகவின் ஆட்சி மன்றக் குழு இன்று கூடியது. இந்தக் கூட்டத்தில் சென்னை ஆர்.கே நகர் வேட்பாளராக டி.டி.வி.தினகரன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு முதன்முறையாக அதிமுகவின் ஆட்சி மன்றக் குழு இன்று கூடியது. இந்தக் கூட்டத்தில் சென்னை ஆர்.கே நகர் வேட்பாளராக டி.டி.வி.தினகரன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
அதிமுகவின் துணைப் பொதுச் செயலாளரான டிடிவி தினகரனின் பெயரை குழு உறுப்பினர் செங்கோட்டையன் ஆர்.கே.நகர் வேட்பாளராக அறிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தினகரன், ‘கட்சியினர் வற்புறுத்தலினால் ஆர்.கே.நகரில் போட்டியிடுகிறேன். வரும் 23 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்கிறேன். 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் ஆர்.கே.நகரில் வெற்றி பெறுவேன். ஆர்.கே.நகரில் வெற்றி பெற்றால் முதல்வராகும் எண்ணமில்லை. முதலமைச்சராக பழனிசாமியே தொடர்வார்.
எங்களுக்குப் போட்டியாகக் கருதுவது திமுகவை மட்டுமே. வேறு எந்தக் கட்சியையோ, குழுவையோ போட்டியாகக் கருதவில்லை. தேர்தலில் ஆதரவு தர மதிமுக,தேமுதிக, காங்கிரஸ்,பாஜக உள்ளிட்ட கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கிறேன்.
Advertisement
ஜெயலலிதா மக்களுக்குச் செய்ய நினைத்த அனைத்து நலத்திட்டங்களையும் நிறைவேற்றுவேன். ஆர்.கே.நகரில் இரட்டை இலைச் சின்னத்தில்தான் போட்டியிடுவேன். கருணாநிதி என்னும் தீய சக்தியிடம் இருந்து மக்களைக் காப்பதே அதிமுகவின் கடமை’ என்றார்.
அதிமுகவின் துணைப் பொதுச் செயலாளரான டிடிவி தினகரனின் பெயரை குழு உறுப்பினர் செங்கோட்டையன் ஆர்.கே.நகர் வேட்பாளராக அறிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தினகரன், ‘கட்சியினர் வற்புறுத்தலினால் ஆர்.கே.நகரில் போட்டியிடுகிறேன். வரும் 23 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்கிறேன். 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் ஆர்.கே.நகரில் வெற்றி பெறுவேன். ஆர்.கே.நகரில் வெற்றி பெற்றால் முதல்வராகும் எண்ணமில்லை. முதலமைச்சராக பழனிசாமியே தொடர்வார்.
எங்களுக்குப் போட்டியாகக் கருதுவது திமுகவை மட்டுமே. வேறு எந்தக் கட்சியையோ, குழுவையோ போட்டியாகக் கருதவில்லை. தேர்தலில் ஆதரவு தர மதிமுக,தேமுதிக, காங்கிரஸ்,பாஜக உள்ளிட்ட கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கிறேன்.
Advertisement
ஜெயலலிதா மக்களுக்குச் செய்ய நினைத்த அனைத்து நலத்திட்டங்களையும் நிறைவேற்றுவேன். ஆர்.கே.நகரில் இரட்டை இலைச் சின்னத்தில்தான் போட்டியிடுவேன். கருணாநிதி என்னும் தீய சக்தியிடம் இருந்து மக்களைக் காப்பதே அதிமுகவின் கடமை’ என்றார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை