Ad Code

Responsive Advertisement

ஆர்.கே.நகர் அதிமுக வேட்பாளராகக் களம் இறங்கும் டி.டி.வி.தினகரன்

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு முதன்முறையாக அதிமுகவின் ஆட்சி மன்றக் குழு இன்று கூடியது. இந்தக் கூட்டத்தில் சென்னை ஆர்.கே நகர் வேட்பாளராக டி.டி.வி.தினகரன் அறிவிக்கப்பட்டுள்ளார்.






TTV Dinakaran
அதிமுகவின் துணைப் பொதுச் செயலாளரான டிடிவி தினகரனின் பெயரை குழு உறுப்பினர் செங்கோட்டையன் ஆர்.கே.நகர் வேட்பாளராக அறிவித்தார். 
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தினகரன், ‘கட்சியினர் வற்புறுத்தலினால் ஆர்.கே.நகரில் போட்டியிடுகிறேன். வரும் 23 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்கிறேன். 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் ஆர்.கே.நகரில் வெற்றி பெறுவேன். ஆர்.கே.நகரில் வெற்றி பெற்றால் முதல்வராகும் எண்ணமில்லை. முதலமைச்சராக பழனிசாமியே தொடர்வார். 
TTV Dinakaran
எங்களுக்குப் போட்டியாகக் கருதுவது திமுகவை மட்டுமே. வேறு எந்தக் கட்சியையோ, குழுவையோ போட்டியாகக் கருதவில்லை. தேர்தலில் ஆதரவு தர மதிமுக,தேமுதிக, காங்கிரஸ்,பாஜக உள்ளிட்ட கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கிறேன்.  
தினகரன்

Advertisement


ஜெயலலிதா மக்களுக்குச் செய்ய நினைத்த அனைத்து நலத்திட்டங்களையும் நிறைவேற்றுவேன். ஆர்.கே.நகரில் இரட்டை இலைச் சின்னத்தில்தான் போட்டியிடுவேன். கருணாநிதி என்னும் தீய சக்தியிடம் இருந்து மக்களைக் காப்பதே அதிமுகவின் கடமை’ என்றார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement