தொழிலாளர்கள் ஓய்வு பெற்ற பின் ரூ.20 லட்சம் வரை பணிக்கொடை (கிராஜுவிட்டி) பெறுவதற்கு வழிவகை செய்யும் வரைவு திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளிக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
மத்திய அமைச்சரவைக்கூட்டம்
தில்லியில் புதன்கிழமை நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் பணிக்கொடை செலுத்தகைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான வரைவு மசோதா பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, ஒப்புதல் அளிக்கப்படும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், தொழிலாளர்கள் ஓய்வு பெற்ற பின் ரூ.20 லட்சம் வரை வரிப் பிடித்தம் இல்லாமல் பணிக்கொடை பெறுவதற்கு வழிவகை பிறக்கும்.
முன்னதாக, மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகத்துடன் கடந்த மாதம் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையில் இந்தத் திட்டத்தை மத்திய தொழிற்சங்கங்கள் ஒப்புக் கொண்டன.
எனினும், மேற்கண்ட பணிக்கொடையை வழங்க வேண்டுமானால் ஒரு நிறுவனத்தில் குறைந்தபட்சம் 10 தொழிலாளர்கள் இருக்க வேண்டும் என்றும் குறைந்தது 5 ஆண்டுகளாவது தொழிலாளர் பணியாற்றியிருக்க வேண்டும் என்ற நிபந்தனைகளை பணிக்கொடை சட்டத்தில் இருந்து நீக்க வேண்டும் என்று தொழிற்சங்கங்கள் கோரின.
மேலும், வரிப்பிடித்தம் இல்லாமல் ரூ.20 லட்சம் வரை பணிக்கொடை பெறலாம் என்ற ஷரத்தானது கடந்த ஆண்டு (2016) ஜனவரி 1-ஆம் தேதியில் இருந்து அமலுக்கு வர வேண்டும் என்றும் தொழிற்சங்கங்கள் கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது
மத்திய அமைச்சரவைக்கூட்டம்
தில்லியில் புதன்கிழமை நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் பணிக்கொடை செலுத்தகைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான வரைவு மசோதா பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, ஒப்புதல் அளிக்கப்படும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், தொழிலாளர்கள் ஓய்வு பெற்ற பின் ரூ.20 லட்சம் வரை வரிப் பிடித்தம் இல்லாமல் பணிக்கொடை பெறுவதற்கு வழிவகை பிறக்கும்.
முன்னதாக, மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகத்துடன் கடந்த மாதம் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையில் இந்தத் திட்டத்தை மத்திய தொழிற்சங்கங்கள் ஒப்புக் கொண்டன.
எனினும், மேற்கண்ட பணிக்கொடையை வழங்க வேண்டுமானால் ஒரு நிறுவனத்தில் குறைந்தபட்சம் 10 தொழிலாளர்கள் இருக்க வேண்டும் என்றும் குறைந்தது 5 ஆண்டுகளாவது தொழிலாளர் பணியாற்றியிருக்க வேண்டும் என்ற நிபந்தனைகளை பணிக்கொடை சட்டத்தில் இருந்து நீக்க வேண்டும் என்று தொழிற்சங்கங்கள் கோரின.
மேலும், வரிப்பிடித்தம் இல்லாமல் ரூ.20 லட்சம் வரை பணிக்கொடை பெறலாம் என்ற ஷரத்தானது கடந்த ஆண்டு (2016) ஜனவரி 1-ஆம் தேதியில் இருந்து அமலுக்கு வர வேண்டும் என்றும் தொழிற்சங்கங்கள் கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை