செல்லாததாக அறிவிக்கப்பட்டுள்ள, பழைய, 500 - 1,000 ரூபாய் நோட்டுகளை வைத்திருப்பது சட்டவிரோதம் என்று சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதனால், மார்ச், 31 வரை பழைய நோட்டுகளை மாற்றுவதற்கு வாய்ப்பு அளிக்க முடியாது' என, சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
'செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பு வெளியிடும்போது, 2017, மார்ச், 31 வரை வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம் என, பிரதமர் மோடி உறுதி அளித்தார். ஆனால், வங்கிகள் ஏற்க மறுக்கின்றன. பிரதமர் தனது வாக்குறுதியை மீறியுள்ளார்.
பழைய, செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ள உத்தரவிட வேண்டும்' என, சுப்ரீம் கோர்ட்டில் பொது நலன் வழக்கு தொடரப்பட்டது.
இதை விசாரித்த, தலைமை நீதிபதி, ஜே.எஸ்.கேஹர் தலைமையிலான அமர்வு, இது குறித்து பதிலளிக்கும்படி, மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் உத்தரவிட்டது.
அதன்படி, இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசின் சார்பில் ஆஜரான, அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹத்கி கூறியதாவது:
செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பைத் தொடர்ந்து, 2016, டிச., 30 வரை பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ள அவகாசம் அளிக்கப்பட்டது.
அந்த தேதிக்கு பிறகு, பழைய, செல்லாத ரூபாய் நோட்டுகள் வைத்திருப்பது சட்டவிரோதம் என, சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதனால், பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ள மார்ச், 31 வரை அவகாசம் அளிக்க முடியாது.இவ்வாறு அவர் கூறினார்.
'செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பு வெளியிடும்போது, 2017, மார்ச், 31 வரை வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம் என, பிரதமர் மோடி உறுதி அளித்தார். ஆனால், வங்கிகள் ஏற்க மறுக்கின்றன. பிரதமர் தனது வாக்குறுதியை மீறியுள்ளார்.
பழைய, செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ள உத்தரவிட வேண்டும்' என, சுப்ரீம் கோர்ட்டில் பொது நலன் வழக்கு தொடரப்பட்டது.
இதை விசாரித்த, தலைமை நீதிபதி, ஜே.எஸ்.கேஹர் தலைமையிலான அமர்வு, இது குறித்து பதிலளிக்கும்படி, மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் உத்தரவிட்டது.
அதன்படி, இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசின் சார்பில் ஆஜரான, அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹத்கி கூறியதாவது:
செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பைத் தொடர்ந்து, 2016, டிச., 30 வரை பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ள அவகாசம் அளிக்கப்பட்டது.
அந்த தேதிக்கு பிறகு, பழைய, செல்லாத ரூபாய் நோட்டுகள் வைத்திருப்பது சட்டவிரோதம் என, சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதனால், பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ள மார்ச், 31 வரை அவகாசம் அளிக்க முடியாது.இவ்வாறு அவர் கூறினார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை