தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் வாயிலாக, சிறப்பு காவல் படை, ஆயுதப்படை, சிறைத் துறை மற்றும் தீயணைப்பு துறைக்கு, 15 ஆயிரத்து, 711 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இதற்கான அதிகாரபூர்வமாக அறிவிப்பை, சீருடை பணியாளர் தேர்வு குழுமம், ஜன., 23ல் வெளியிட்டது. தபால் நிலையங்களில், விண்ணப்பங்கள் வினியோகிக்கப்பட்டன. பிப்., 22 வரை, விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதன்படி, போலீஸ் வேலைக்கு, ஆறு லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளனர்.
இது குறித்து, போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது: போலீஸ் வேலைக்கு, 2012க்கு பின், தற்போது தான் ஆட்கள் தேர்வு நடக்கிறது. விண்ணப்பத்தில், திருநங்கை என, குறிப்பிட வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது. அதனால், 500க்கும் மேலான திருநங்கையர் விண்ணப்பித்து உள்ளனர்.எழுத்துத் தேர்வு, மே., 21ல் நடக்கிறது. பின், உடல் தகுதி தேர்வு, உடல் திறன் போட்டிகள் நடத்தப்பட்டு, இறுதி பட்டியல் தயாரிக்கப்படும். மருத்துவ பரிசோதனை முடிந்து, விண்ணப்பத்தாரரின் முந்தைய பழக்கவழக்கங்கள் மற்றும் குண நலன்கள் குறித்து விசாரித்து தேர்வு செய்யப்படுவர். முழு விபரங்களை, www.tnusrb.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம், என்றனர்.
இதற்கான அதிகாரபூர்வமாக அறிவிப்பை, சீருடை பணியாளர் தேர்வு குழுமம், ஜன., 23ல் வெளியிட்டது. தபால் நிலையங்களில், விண்ணப்பங்கள் வினியோகிக்கப்பட்டன. பிப்., 22 வரை, விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதன்படி, போலீஸ் வேலைக்கு, ஆறு லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளனர்.
இது குறித்து, போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது: போலீஸ் வேலைக்கு, 2012க்கு பின், தற்போது தான் ஆட்கள் தேர்வு நடக்கிறது. விண்ணப்பத்தில், திருநங்கை என, குறிப்பிட வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது. அதனால், 500க்கும் மேலான திருநங்கையர் விண்ணப்பித்து உள்ளனர்.எழுத்துத் தேர்வு, மே., 21ல் நடக்கிறது. பின், உடல் தகுதி தேர்வு, உடல் திறன் போட்டிகள் நடத்தப்பட்டு, இறுதி பட்டியல் தயாரிக்கப்படும். மருத்துவ பரிசோதனை முடிந்து, விண்ணப்பத்தாரரின் முந்தைய பழக்கவழக்கங்கள் மற்றும் குண நலன்கள் குறித்து விசாரித்து தேர்வு செய்யப்படுவர். முழு விபரங்களை, www.tnusrb.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம், என்றனர்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை