Ad Code

Responsive Advertisement

போலீஸ் வேலைக்கு 6 லட்சம் பேர் விண்ணப்பம்

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் வாயிலாக, சிறப்பு காவல் படை, ஆயுதப்படை, சிறைத் துறை மற்றும் தீயணைப்பு துறைக்கு, 15 ஆயிரத்து, 711 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இதற்கான அதிகாரபூர்வமாக அறிவிப்பை, சீருடை பணியாளர் தேர்வு குழுமம், ஜன., 23ல் வெளியிட்டது. தபால் நிலையங்களில், விண்ணப்பங்கள் வினியோகிக்கப்பட்டன. பிப்., 22 வரை, விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதன்படி, போலீஸ் வேலைக்கு, ஆறு லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளனர்.
இது குறித்து, போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது: போலீஸ் வேலைக்கு, 2012க்கு பின், தற்போது தான் ஆட்கள் தேர்வு நடக்கிறது. விண்ணப்பத்தில், திருநங்கை என, குறிப்பிட வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது. அதனால், 500க்கும் மேலான திருநங்கையர் விண்ணப்பித்து உள்ளனர்.எழுத்துத் தேர்வு, மே., 21ல் நடக்கிறது. பின், உடல் தகுதி தேர்வு, உடல் திறன் போட்டிகள் நடத்தப்பட்டு, இறுதி பட்டியல் தயாரிக்கப்படும். மருத்துவ பரிசோதனை முடிந்து, விண்ணப்பத்தாரரின் முந்தைய பழக்கவழக்கங்கள் மற்றும் குண நலன்கள் குறித்து விசாரித்து தேர்வு செய்யப்படுவர். முழு விபரங்களை, www.tnusrb.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம், என்றனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement