தமிழகத்தில் பிளஸ்2 தேர்வு துவங்கியுள்ள நிலையில், பள்ளிகளில் ரூபெல்லா மற்றும் தட்டம்மை தடுப்பூசி போட முடியாமல் சுகாதாரத் துறையினர் திணறி வருகின்றனர்.தமிழகத்தில் ரூபெல்லா மற்றும் தட்டம்மை தடுப்பூசி ஒன்று முதல் 15 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு சுகாதாரத்துறை மூலம் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.
இதற்கு பல பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து, தங்கள் குழந்தைகளுக்கு தடுப்பூசி போட மறுத்தனர்.இது குறித்து அரசு விளக்கம் தந்தும், விழிப்புணர்வு ஏற்படுத்தியும் வருகின்றனர்.கிராம புற பள்ளிகளில் இன்னும் பல குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்படாததால், மார்ச் 14ம் தேதி வரை நீட்டித்து சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் விடுபட்ட பள்ளிகளுக்கு சென்று தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என அறிவுறுத்தியுள்ளது.
பொதுத் தேர்வால் சிக்கல் : தமிழகத்தில் பிளஸ்2 தேர்வு நேற்று துவங்கியுள்ளது. மார்ச் 8ல் பத்தாம் வகுப்பு தேர்வுகள் துவங்க உள்ளன. இதனால் தேர்வு மையம் உள்ள பள்ளிகளில் காலையில் மாணவர்கள் நுழைய முடியாது. பகல் 2 மணிக்குத்தான் மாணவர்கள் வருவார்கள். தேர்வு நடக்கும் பள்ளிகளில் சுகாதாரத்துறையினரும் நுழைந்து தடுப்பூசி வழங்க முடியாது. இந்த சிக்கலால் சுகாதாரத்துறையினர் திணறி வருகின்றனர்.
சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: பிளஸ் 2 தேர்வு மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வுகளால் பள்ளிகளில் முழு ஒத்துழைப்பு கிடைக்காது. இந்நிலையில் மார்ச் 14 வரை இந்த திட்டத்தை நீட்டித்தும் பயனில்லை. இது குறித்து உயர் அதிகாரிகளுக்கும் தெரிவித்துள்ளோம், என்றார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை