பிளஸ் 2, வேதியியல், கணித பதிவியல் வினாத்தாள்கள், 'ஈசி'யாக இருந்ததால், 'சென்டம்' அதிகரிக்கலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. பிளஸ் 2 பொதுத்தேர்வில், மொழிப்பாடத் தேர்வுகள் முடிந்து, நேற்று முக்கிய பாடத் தேர்வுகள் தொடங்கின.
அறிவியல் பிரிவு மாணவர்களுக்கு, நேற்று வேதியியல் தேர்வு நடந்தது. மூன்று ஆண்டுகளாக, வேதியியல் தேர்வில் கடினமான வினாக்கள், வினாத்தாளில் பிழைகள் இருந்தன.அதனால், போனஸ் மதிப்பெண் அளிக்கும் நிலை ஏற்பட்டது.அதனால், நேற்றைய வேதியியல் தேர்வு குழப்பமாக, கடினமாக இருக்குமோ என, மாணவர்கள் அச்சத்தில் இருந்தனர். ஆனால், வினாத்தாளில், மிக எளிமையான கேள்விகள், இடம் பெற்றிருந்தன. பெரும்பாலான கேள்விகள், பாடங்களின் பின்பக்க தொகுப்பில் உள்ள கேள்விகளில் இருந்தும், முந்தைய ஆண்டு தேர்வுகளில் பலமுறை இடம் பெற்றவையாகவும் இருந்தன.இதுகுறித்து, மாணவர்களும், ஆசிரியர்களும் கூறுகையில், 'வேதியியல் தேர்வு, இவ்வளவு எளிதாக இருக்கும் என, நினைக்கவில்லை. வேதியியலில், இந்த ஆண்டு, 'சென்டம்' அதிகரிக்கும்' என்றனர்.
அதேபோல, வணிகவியல் பிரிவு மாணவர்களுக்கு, கணித பதிவியல் என்ற, 'அக்கவுன்டன்சி' தேர்வு நடந்தது. கணக்கீடுகள் குழப்பமின்றி, கேள்வித்தாள் எளிமையாக இருந்து உள்ளது.இதுகுறித்து, சென்னை சவுகார்பேட்டை, எம்.பி.யூ., மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் ஆனந்தன் கூறுகையில், ''கணித பதிவியலில் இது போன்று எளிமையான கேள்வித்தாள் வடிவமைப்பது கடினம். அரசு பள்ளிகளின், சராசரி மாணவர்களும் நல்ல மதிப்பெண் பெறலாம்,'' என்றார்.
அறிவியல் பிரிவு மாணவர்களுக்கு, நேற்று வேதியியல் தேர்வு நடந்தது. மூன்று ஆண்டுகளாக, வேதியியல் தேர்வில் கடினமான வினாக்கள், வினாத்தாளில் பிழைகள் இருந்தன.அதனால், போனஸ் மதிப்பெண் அளிக்கும் நிலை ஏற்பட்டது.அதனால், நேற்றைய வேதியியல் தேர்வு குழப்பமாக, கடினமாக இருக்குமோ என, மாணவர்கள் அச்சத்தில் இருந்தனர். ஆனால், வினாத்தாளில், மிக எளிமையான கேள்விகள், இடம் பெற்றிருந்தன. பெரும்பாலான கேள்விகள், பாடங்களின் பின்பக்க தொகுப்பில் உள்ள கேள்விகளில் இருந்தும், முந்தைய ஆண்டு தேர்வுகளில் பலமுறை இடம் பெற்றவையாகவும் இருந்தன.இதுகுறித்து, மாணவர்களும், ஆசிரியர்களும் கூறுகையில், 'வேதியியல் தேர்வு, இவ்வளவு எளிதாக இருக்கும் என, நினைக்கவில்லை. வேதியியலில், இந்த ஆண்டு, 'சென்டம்' அதிகரிக்கும்' என்றனர்.
அதேபோல, வணிகவியல் பிரிவு மாணவர்களுக்கு, கணித பதிவியல் என்ற, 'அக்கவுன்டன்சி' தேர்வு நடந்தது. கணக்கீடுகள் குழப்பமின்றி, கேள்வித்தாள் எளிமையாக இருந்து உள்ளது.இதுகுறித்து, சென்னை சவுகார்பேட்டை, எம்.பி.யூ., மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் ஆனந்தன் கூறுகையில், ''கணித பதிவியலில் இது போன்று எளிமையான கேள்வித்தாள் வடிவமைப்பது கடினம். அரசு பள்ளிகளின், சராசரி மாணவர்களும் நல்ல மதிப்பெண் பெறலாம்,'' என்றார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை