தேர்வர்கள் கேள்வியும் - பதிலும்
இதற்கான பதில் :
நீங்கள் முழுக்க முழுக்க படிக்க வேண்டியது பள்ளி சமச்சீர் பாட புத்தகம்மட்டுமே.வரி விடாமல் நுணுக்கமாக ஆழமாக பாட கருத்தை உள் வாங்குதல் மிக அவசியம்.
உங்கள் வினாத்தாளில் இடம் பெறும் கேள்விகள் அனைத்தும் புத்தகம் தவிர வேறுஎங்கும் இல்லை.
வினா முறை எப்படி இருக்கும்?
பல லட்ச போட்டியளரின் சிந்தனையை சோதித்து திறன் மிக்க தேர்வரை தேர்வு செய்வதேநோக்கம்.எனவே கேள்விகள் அனைத்தும் மனத் திறனை சோதிக்கும் வகையிலே அமையும்.வினா நேரடி எளிய வினாவாக அமையாமல் மறைமுக கடின வினா அமைப்பிலே இடம் பெறும்
எப்படி படித்தால் வெற்றி பெறலாம் ?
* கடின உழைப்பு
* தீவிர பயிற்சி
* அன்றைய பாடபகுதியை அன்றே திருப்புதல் செய்தல்
* தேவையற்ற குறிப்புகளை(material) பயன்படுத்தும் ஆசையை குறைக்கவும்
* ஆழ்ந்து படித்தல், விரைவாக படித்தல் இரண்டும் ஒருங்கே செய்தல் அவசியம்
* முழு புத்தக வாசிப்பு கட்டாயம்
* இதுவே உங்களுக்கு கொடுக்க பட்ட கடைசி வாய்ப்பு . எக்காரணம் கொண்டும் சலிப்புகூடாது.
* முயற்சி அளவை பொறுத்து வெற்றி தூரம் அமையும்
* இணையம் வழி நேர விரயம் குறைக்கவும்
பயம் , பதட்டம் எப்படி போக்குவது?
* நீங்கள் உங்கள் தன்னம்பிக்கையையே நம்பாத போது , அரசு எவ்வாறு எதிர்காலதலைமுறை உருவாக்கும் ஆசிரிய பணியை நம்பி தரும்
* எனவே வெற்றி நிச்சயம் என நீங்கள் உங்கள் மனதை தயார்படுத்துங்கள்
* பயம் , பதற்றம் வெற்றியின் எதிரிகள். அவற்றை தவிருங்கள்
கோச்சிங் செல்லலாமா?
அது அவரவர் தனிப்பட்ட விருப்பம். திறன் வாய்ந்த சிறப்பான கோச்சிங் கிடைத்தால்செல்லலாம்.
எவ்வளவு நேரம் படிக்கலாம் ?
தூக்கம் | ஓய்வு தவிர்த்து 13 - 15 மணி நேரம் படியுங்கள்
வெற்றி பெற ஒரு டிப்ஸ் ?
தெளிந்த நல்முயற்சி மட்டுமே.
- வாழ்ந்துகளுடன் பிரதீப் - பாபு ப .ஆ .
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை