சென்னை: ‛ நாளை பிரதமர் மோடியை சந்தித்து ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டத்தை உடனே பிறப்பிக்க வேண்டும் என வலியுறுத்த உள்ளேன்' என, முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
முதல்வர் அறிக்கை:
இன்று(ஜன.,18) மாலை அவர் வெளியிட்ட அறிக்கை:
ஜல்லிக்கட்டு நடைபெறாத நிலையில், தங்களின் உள்ள குமுறல்களை வெளிப்படுத்தும் வகையில், மாணவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அமைதியான முறையில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அவர்களின் உணர்வின் அங்கமாக தமிழக அரசு செயல்பட்டு வருகிறது.
ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும் என்றால், உச்சநீதிமன்றம் நமக்கு சாதகமான தீர்ப்பை வழங்க வேண்டும். இந்த தீர்ப்பிற்கு முன், ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும் என்றால் அதற்குரிய சட்ட திருத்தத்தை மேற்கொள்ளும் அதிகாரம் மத்திய அரசிடம் தான் உள்ளது. மாநில அரசு இதற்கான முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. தமிழக அரசு ஜல்லிக்கட்டு நடைபெறுவதற்கான அனைத்து முயற்சிகளையும் தொடர்ந்து எடுத்திடும் என்ற உத்தரவாதத்தை நான் அளிக்கிறேன்.
நாளை காலை டில்லியில் பிரதமரை சந்தித்து ஜல்லிக்கட்டு நடத்திட அவசர சட்டத்தை உடனே பிறப்பிக்க வேண்டும் என வலியுறுத்த உள்ளேன். எனவே, அனைவரும் தங்கள் போராட்டங்களை கைவிட வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
முதல்வர் அறிக்கை:
இன்று(ஜன.,18) மாலை அவர் வெளியிட்ட அறிக்கை:
ஜல்லிக்கட்டு நடைபெறாத நிலையில், தங்களின் உள்ள குமுறல்களை வெளிப்படுத்தும் வகையில், மாணவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அமைதியான முறையில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அவர்களின் உணர்வின் அங்கமாக தமிழக அரசு செயல்பட்டு வருகிறது.
ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும் என்றால், உச்சநீதிமன்றம் நமக்கு சாதகமான தீர்ப்பை வழங்க வேண்டும். இந்த தீர்ப்பிற்கு முன், ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும் என்றால் அதற்குரிய சட்ட திருத்தத்தை மேற்கொள்ளும் அதிகாரம் மத்திய அரசிடம் தான் உள்ளது. மாநில அரசு இதற்கான முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. தமிழக அரசு ஜல்லிக்கட்டு நடைபெறுவதற்கான அனைத்து முயற்சிகளையும் தொடர்ந்து எடுத்திடும் என்ற உத்தரவாதத்தை நான் அளிக்கிறேன்.
நாளை காலை டில்லியில் பிரதமரை சந்தித்து ஜல்லிக்கட்டு நடத்திட அவசர சட்டத்தை உடனே பிறப்பிக்க வேண்டும் என வலியுறுத்த உள்ளேன். எனவே, அனைவரும் தங்கள் போராட்டங்களை கைவிட வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை