கடந்த மாதம் 7ம் தேதி பிளஸ் 2 வகுப்புக்கான அரையாண்டுத் தேர்வு தொடங்கும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்து இருந்தது. இந்நிலையில் கடந்த 5ம் தேதி முதல்வர் ஜெயலலிதா மறைந்தார். இதையடுத்து 3 நாட்கள் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டது. 7, 8ம் தேதி நடக்க இருந்த தேர்வு ஒத்திவைக்கப்பட்டது.
இந்த இரண்டு தேர்வுகளையும் நடத்துவது குறித்து கடந்த மாதம் 20ம் தேதி பள்ளிக் கல்வித்துறை மீண்டும் ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி 7, 8ம் தேதிகளில் நடக்க இருந்த தேர்வுகள் ஜனவரி 2 மற்றும் 3ம் தேதிகளில் நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
இது குறித்து அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டது. அரையாண்டுத் தேர்வுகள் 23ம் தேதி முடிவுற்ற நிலையில் 24ம் தேதி முதல் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன. முன்பு ஒத்திவைக்கப்பட்ட தேர்வில் தமிழ் முதல் தாள் தேர்வு இன்று நடக்கிறது. இரண்டாம் தாள் தேர்வு நாளை நடக்கிறது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை