அரசு பள்ளிகளில் காலியாக உள்ள, 1,600 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதில், தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., மெத்தனமாக உள்ளதால், மாணவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
தமிழகத்தில், 3,046 அரசு உயர்நிலை, 2,832 மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இவற்றில், 24 ஆயிரத்து, 500 முதுநிலை ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர்; 4,000 இடங்கள் காலியாக உள்ளன. இவற்றில், நேரடி நியமனம் மூலம், 1,613 இடங்களை நிரப்ப, அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
நேரடி நியமன பணிகளை, டி.ஆர்.பி., மூலம் நடத்த வேண்டும். அரசு வேலைவாய்ப்பு துறையின் பதிவு மூப்பு பட்டியல் பெற்று, அதன்பின், முதுநிலை பட்டதாரிகளை, ஆசிரியர்களாக தேர்வு செய்ய வேண்டும். இதற்கு, தமிழக பள்ளி கல்வித்துறை, டி.ஆர்.பி.,க்கு ஒப்புதல் வழங்கி உள்ளது.
இந்த ஒப்புதலை வழங்கி, 10 மாதங்களாகியும், டி.ஆர்.பி., தலைவர் விபு நய்யார், உறுப்பினர் செயலர் உமா ஆகியோர், ஆசிரியர் தேர்வு பணியில் தீவிரம் காட்டாமல் உள்ளதாக, கல்வித் துறையில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது குறித்து, முதுநிலை ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் கூறியதாவது:
காலி பணியிடங்களை நிரப்ப, அரசே ஒப்புதல் அளித்தும், டி.ஆர்.பி., அதிகாரிகள் 'ஆமை' வேகத்தில் செயல்படுகின்றனர்.
பல அரசு பள்ளிகளில், ஆசிரியர் பற்றாக்குறையால், பிளஸ் 2 மாணவர்களுக்கு உரிய காலத்தில், பாடங்களை முடிக்க முடியவில்லை. பெற்றோர் கடன் வாங்கி, பிள்ளைகளை டியூஷனுக்கு அனுப்ப வேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை