Ad Code

Responsive Advertisement

IGNOU தேசிய திறந்தநிலைப் பல்கலை., சேர்க்கைக்கு விண்ணப்பிக்க டிச. 30 கடைசி நாள்.

இந்திராகாந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில்(இக்னோ) சேருவதற்கு விண்ணப்பிக்க டிச. 30-ம் தேதி கடைசி நாள் என அப்பல்கலைக்கழக மதுரை மண்டல உதவி இயக்குநர் பீமாராவ் தெரிவித்தார்.
புதுக்கோட்டை ஜெஜெ. கல்லூரியில் உள்ள இக்னோ மையத்தை சனிக்கிழமை ஆய்வு செய்ய வந்த அவர் மேலும் கூறியது:


இந்திராகாந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில்2017 ஜனவரி பருவத்தில் இளநிலை, முதுநிலை, பட்டயம், சான்றிதழ் படிப்புகளுக்கான சேர்க்கை தேதி டிச. 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.இச்சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் இப்பல்கலைக்கழகப் படிப்பு மையமான பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரியில் கிடைக்கும். விண்ணப்பத்தின் விலை ரூ. 200. பணமில்லா பரிவர்த்தனையை w‌w‌w.‌i‌g‌n‌o‌u.ac.‌i‌n  என்ற இணையதளத்தில் செய்து கொள்ளலாம்.

தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்களுக்கு பி.ஏ., பி.காம்., பி.எஸ்ஸி., பி.சி.ஏ., பி.டி.எஸ்., பி.எஸ்.டபிள்யூ. ஆகியவற்றில் சேருவதற்குக் கட்டண விலக்கு அளிக்கப்படுகிறது.சி.ஏ., காஸ்ட் அக்கவுண்ட்ஸ்,ஐ.சி.எஸ்.ஐ. நிறுவனத்தின் கூட்டு ஒப்பந்தத்தின் மூலம் மாணவர்களுக்கான சிறப்பு பி.காம். பாடத்திட்டம் உள்ளது. இதற்கான விண்ணப்பத்தின் விலை ரூ. 750. மேலும்,விவரங்களுக்கு 96881 70709, 04322- 260103, 261 801, 260 802 ஆகிய எண்களிலும், மதுரை மண்டல அலுவலகத்தை 0452 -2380733, 2380775 என்ற எண்களிலும் தொடர்பு கொள்ளலாம் என்றார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement