''முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தபடி பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும்,'' என, மதுரையில் அரசு அலுவலர் ஒன்றிய மாநில தலைவர் சண்முகராஜன் தெரிவித்தார். அவர் கூறியதாவது:
ஓய்வூதியத் திட்டம் குறித்து சாந்தா ஷீலாநாயர் தலைமையில் அமைக்கப்பட்ட குழு விசாரணை நடத்தியுள்ளது. இதில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை கொண்டு வர பல சங்கங்கள் வலியுறுத்தி உள்ளன. இந்த அறிக்கையை விரைந்து பெற்று பழைய ஓய்வூதியத் திட்டத்தை கொண்டு வர வேண்டும்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக, மாநில அரசும் சம்பளக் குழுவை அமைக்க வேண்டும். பொங்கல் போனசாக குரூப் 'டி' ஊழியர்களுக்கு ஏழாயிரம் ரூபாயும், கருணை அடிப்படையில் இரண்டாயிரம் ரூபாயும் வழங்க வேண்டும். இக்கோரிக்கைகள் குறித்து தலைமை செயலக அலுவலர்கள் சங்கம், அலுவலக உதவியாளர் சங்கத்தினருடன் இணைந்து முதல்வரை சந்திக்க உள்ளோம், என்றார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை