தமிழகத்தில், சென்னை உட்பட நான்கு மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்க, அரசு உத்தரவிட்டு உள்ளது.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள், விழுப்புரம் மாவட்டத்தில் கடலோர தாலுகாக்களிலும், புதுச்சேரியிலும், பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதேபோல், 'அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது' என, கல்லுாரி கல்வி இயக்குனர் ராஜேந்திர ரத்னு தெரிவித்தார்.
அண்ணா பல்கலை கல்லுாரிகள், நிர்வாக அலுவலகங்களுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக, அண்ணா பல்கலை பதிவாளர் கணேசன் தெரிவித்துள்ளார்.
சென்னை பல்கலை, தொலைநிலை கல்வியில், இன்று நடக்க இருந்த தேர்வு, ஏற்கனவே தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தனியார் கல்லுாரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.
அரசு உத்தரவு
'சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் மற்றும் விழுப்புரம் கடலோர பகுதிகளிலும், புயல் முன்னெச்சரிக்கையாக, தனியார் நிறுவனங்கள், தங்கள் தொழிலாளர்களுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும்' என, தமிழக தொழிலாளர் நலத்துறை செயலர், அமுதா அறிவுறுத்தியுள்ளார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை