Ad Code

Responsive Advertisement

சவுதி அரேபியாவில் செவிலியர் பணி, ஜனவரி முதல் வாரத்தில் நேர்முக தேர்வு : தமிழக அரசு தகவல்

தமிழக அரசு நேற்று வெளியிட்ட அறிவிப்பு: சவுதி அரேபிய நாட்டின் ரியாத்தில் உள்ள ஒரு முன்னணி தனியார் மருத்துவமனைக்கு  என்ஐசியூ, மருத்துவம், அறுவைசிகிச்சை மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவு போன்றவற்றில் தொடர்ந்து இரண்டு வருட பணி அனுபவத்துடன் 38 வயதிற்கு உட்பட்ட  பிஎஸ்சி/டிப்ளமோ பெண் செவிலியர்களுக்கான நேர்முகத் தேர்வு ஜனவரி முதல் வாரத்தில் டெல்லியில் நடைபெற உள்ளது. 

பெண் செவிலியர்கள் 250 படுக்கை வசதி கொண்ட கார்பரேட் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஏதேனும் ஒரு துறையில் தொடர்ச்சியாக இரண்டு வருட பணி அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும். சவுதி புரோமெட்ரிக்  தேர்ச்சி தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

தேர்ந்தெடுக்கப்படும் மருத்துவம், அறுவைசிகிச்சை பிரிவு செவிலியர்களுக்கு ₹41,000  மற்றும் என்ஐசியூ, தீவிர சிகிச்சை பிரிவு செவிலியர்களுக்கு ₹50,000 மாத ஊதியத்துடன் ₹6,300 உணவுப்படியும்,  இலவச விமான டிக்கெட்,  இருப்பிடம் ஆகிய சலுகைகள் வழங்கப்படும். 

உரிய தகுதி மற்றும் அனுபவம் உள்ள பெண் செவிலியர்கள் தங்களின் சுயவிவரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன் கல்வி, அனுபவம், செல்லத்தக்க பாஸ்போர்ட், சவுதி புரோமெட்ரிக், போன்ற சான்றிதழ்களின் நகல்கள் மற்றும்  ஒரு புகைப்படத்துடன் omcleq0037@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு  உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும். மேலும் விவரங்களை அறிய 044-22505886, 22502267, 22500417 என்ற தொலைபேசி எண்களிலோ அல்லது என்ற இந்நிறுவன வலைதளமான www.omcmanpower.comல் அறிந்து கொள்ளலாம். இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. 

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement