சபரிமலைக்கு மாலை அணிந்த மாணவியை, பள்ளியை விட்டு வெளியேற்றிய தமிழ் ஆசிரியை, வேறு பள்ளிக்கு மாற்றப்பட்டார். வேலுார் மாவட்டம், திம்மணாமுத்துார் கிராமத்தை சேர்ந்த ரமேஷ் என்பவரின், 12 வயது மகள், அங்குள்ள அரசு பள்ளியில், ஏழாம் வகுப்பு படித்து வருகிறார்.
ரமேசும், மகளும் சபரிமலைக்கு மாலை அணிந்து விரதம் இருந்தனர். நவ., 24ல், பள்ளிக்கு மாலை அணிந்து வந்த மாணவியை, தமிழ் ஆசிரியை மணிமேகலை, பள்ளியை விட்டு வெளியேற்றியதாக தெரிகிறது. மாணவியின் தந்தை ரமேஷ், வேலுார் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பூபதியிடம் புகார் செய்தார். திருப்பத்துார் கல்வி மாவட்ட அலுவலர் பிரியதர்ஷினி விசாரணையில், சம்பவம் உண்மை என, தெரியவந்தது. இதையடுத்து, ஆசிரியை மணிமேகலை, திருப்பத்துார் அரசு நிதியுதவி பெறும் பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை