Ad Code

Responsive Advertisement

வங்கிகளில் 'டிபாசிட்' : வருமான வரி 'நோட்டீஸ்'

தமிழகத்தில், வங்கிக் கணக்குகளில், அதிக பணம், 'டிபாசிட்' செய்தவர்களுக்கு, வருமான வரித் துறை, 'நோட்டீஸ்' அனுப்ப துவங்கியுள்ளது,'' என, வருமான வரித் துறை முதன்மை தலைமை ஆணையர், ஏ.கே.ஸ்ரீவஸ்தவா தெரிவித்தார்.

தமிழகத்தில், வங்கிக் கணக்குகளை நேரடியாக கண்காணிக்க, எங்களுக்கு வசதி இல்லை என்ற போதிலும், அதன் விபரங்களை பெறுவதற்கான, பல்வேறு வழிமுறைகள் உள்ளன. அதன்அடிப்படையில், வங்கிகளில், திடீரென அதிகமாக பணம் டிபாசிட் செய்யப்பட்டுள்ள, சேமிப்புக் கணக்கு எண்களை பெற துவங்கி உள்ளோம். அவற்றை ஆய்வு செய்து, 'நோட்டீஸ்' அனுப்ப துவங்கி இருக்கிறோம்.

எத்தனை பேருக்கு, நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என, இப்போதைக்கு கூற முடியாது. ஆனால், நடவடிக்கை துவங்கப்பட்டிருப்பது உறுதி. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement