Ad Code

Responsive Advertisement

2017 ஆங்கிலப் புத்தாண்டு ராசி (குடும்ப) பலன்கள்

மேஷம், ரிஷபம் மற்றும் மிதுனம்


சூரியனின் ஆதிக்க எண்ணாகிய ஒன்றாம் எண்ணிலும், கதிரவனின் நாளான ஞாயிற்றுக்கிழமையிலும் 2017ம் வருடம் பிறப்பதால் அதிரடி அரசியல் நிகழ்வுகள் தினந்தோறும் அரங்கேறும். எண் ஜோதிடப்படி விதி எண்ணாக குருவின் ஆதிக்கம் கொண்ட மூன்றாம் எண் வருவதால் பணக்காரர்கள், பதுக்கல்காரர்கள் பாதிக்கப்படுவார்கள். பஞ்சபட்சி சாஸ்திரப்படி மயில் துயில் கொள்ளும் நேரத்தில் இந்த வருடம் பிறப்பதால் ஊர்க்குருவிகள் பருந்துகளாக தம்மை காட்டிக்கொள்ளும். திருவோணம் நட்சத்திரம், மகர ராசி, கன்னி லக்னத்தில் இந்த ஆண்டு பிறப்பதால் கேமரா, டிவி, மொபைல், லேப்டாப் போன்ற எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களின் விலை குறையும்.

தனக்காரகன் குரு தனது பகைக்கிரகமான புதன் வீட்டில் ஆகஸ்ட் மாதம் வரை தொடர்வதால் அதுவரை பணத்தட்டுப்பாடு இருக்கும். பதுக்கல் தங்கம் பிடிபடும். வங்கிகளில் கடன் பெற கடுமையான விதிமுறைகள் பிறப்பிக்கப்படும். ஹவாலா மோசடிகள் தடுக்கப்படும். பாலியல் வல்லுறவுக் குற்றத்திற்கான தண்டனைகள் கடுமையாக்கப்படும். 10-ம் மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் முறை கணினிமயமாக்கப்படும்.

28.1.2017 முதல் 5.6.2017 வரை சுக்ரன் மீன ராசியிலேயே அமர்வதால் சினிமாத் தொழில் பாதிப்படையும். புகழ்பெற்ற படத்தயாரிப்பாளர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் நஷ்டமடைவர். பழைய முன்னணி இயக்குனர்கள், நடிகர், நடிகைகளை விட புது முகங்கள் பிரபலமாவார்கள். கலைஞர்கள் பாதிப்படைவார்கள். அதிவேக அதிநவீன வாகனங்கள் மற்றும் சுற்றுச்சுழலை பாதிக்காத மின்சாரம் மற்றும் சூரிய ஆற்றலில் இயங்கும் வாகனங்கள் விற்பனைக்கு வரும்.

செவ்வாயின் போக்கையும், சனியின் சஞ்சாரத்தையும் அடிப்படையாகக் கொண்டு பார்க்கும்போது பிப்ரவரி மாதம் முதல் உச்ச நீதிமன்றத்திற்கும், மத்திய அரசிற்கும் உள்ள பனிப்போர் நீங்கும். காலியாக உள்ள நீதிபதி பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்படும். ராணுவம் மற்றும் நாட்டின் பாதுகாப்பிற்கு அதிக நிதி ஒதுக்கப்படும். ரியல் எஸ்டேட், பத்திரப்பதிவு மற்றும் கட்டுமானத்துறையில் ஊழல்களைத் தடுக்க புதிய சட்டங்கள் அமலுக்கு வரும். புதிய மேம்பாலங்கள் மற்றும் புதிய நகரங்கள் அமைக்கப்படும்.

அமெரிக்கா, ரஷ்யா, சிங்கப்பூர் ஆகிய நாடுகள் இந்தியாவிற்கு உதவும். பாகிஸ்தான், சீனாவின் அத்துமீறல்களுக்கு தகுந்த பதிலடி தரப்படும். கிரிக்கெட்டில் மேலும் இந்தியா சாதிக்கும்.

10.4.2017முதல் 16.4.2017 வரை, 28.5.2017முதல் 4.6.2017வரை, 25.6.2017முதல் 3.7.2017 வரை, 23.7.2017முதல் 29.7.2017வரை, 19.8.2017முதல் 25.8.2017வரை, 13.9.2017முதல் 19.9.2017வரை, 9.10.2017முதல் 14.10.2017வரை, 1.11.2017முதல் 6.11.2017வரை, 17.11.2017முதல் 30.11.2017வரை உள்ள காலகட்டத்தில் புயல் சின்னம் உருவாகி மழை பொழியும் வாய்ப்புள்ளது.

மேஷம்

எதிலும் முதலிடத்தைப் பிடிக்க வேண்டுமென்று நினைப்பவர்களே! உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் கடின உழைப்பால் சாதிப்பீர்கள். மனப்போராட்டங்கள் ஓயும். சமயோஜிதமான பேச்சால் தடைபட்ட வேலைகளை முடிப்பீர்கள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் காத்திருந்த பணம் கைக்கு வரும். பழைய கடன் பிரச்சினைகள் தீரும். 26.7.2017 வரை உங்கள் ராசிக்கு ராகு 5-ல் நிற்பதால் பிள்ளைகளின் பிடிவாதம் அதிகரிக்கும். மகளுக்கு வரன் தேடும் போது மணமகனின் பழக்கவழக்கங்களை விசாரித்து முடிவெடுப்பது நல்லது. பணம் கொடுக்கல், வாங்கல் விஷயத்தில் கவனமாக இருங்கள்.

பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் வழக்கறிஞரின் ஆலோசனையின்றி எந்த முடிவுகளும் எடுக்காதீர்கள். கேது 11-ம் வீட்டில் தொடர்வதால் பணவரவு அதிகரிக்கும். பழைய கடனை அடைக்க வழி பிறக்கும். அயல்நாட்டிலிருக்கும் உறவினர்கள், நண்பர்களால் உதவிகள் கிடைக்கும். வேற்றுமொழி, மதத்தவர் களால் ஆதாயமடைவீர்கள். வி.ஐ.பிகள், தொழிலதிபர்களின் நட்பைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்வீர்கள். வீட்டில் தடைபட்ட சுபகாரியங்கள் ஏற்பாடாகும். ஆனால் 27.7.2017 முதல் வருடம் முடியும் வரை உங்கள் ராசிக்கு ராகு 4-ம் வீட்டிலும், கேது 10-ம் இடத்திலும் அமர்வதால் ஓய்வெடுக்க முடியாதபடி அடுத்தடுத்த வேலைப்பளு இருந்துக் கொண்டேயிருக்கும்.

வீண்பழிகளும் வரக்கூடும். தாயாருடன் வீண் விவாதம், அவருக்கு கை, கால் வலி, இரத்த அழுத்தம் வந்து போகும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகளும் அதிகரிக்கும். உத்யோகத்தில் நெருக்கடிகள், இடமாற்றங்கள் வந்து செல்லும். மற்றவர்களுக்காக ஜாமீன், உத்தரவாதக் கையொப்பமிட வேண்டாம். உடல் எடை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். சின்ன சின்ன உடற்பயிற்சி, நடைப்பயிற்சி மேற்கொள்வது நல்லது.

புத்தாண்டின் தொடக்கம் முதல் 01.09.2017 வரை உங்களின் குரு உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் குடும்பத்தில் வீண் சச்சரவுகள் வரக்கூடும். முக்கியக் கோப்புகளைக் கையாளும் போது அலட்சியம் வேண்டாம். வங்கிக் காசோலையில் முன்னரே கையொப்பமிட்டு வைக்காதீர்கள். வீண் சந்தேகத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க நேரிடும். ஆனால் 02.9.2017 முதல் குருபகவான் 7-ம் வீட்டில் அமர்ந்து உங்களைப் பார்க்கவிருப்பதால் உங்களிடம் மறைந்துக் கிடந்த திறமைகளை வெளிப்படுத்த நல்ல சந்தர்ப்பம் கிடைக்கும்.

தள்ளிப் போன திருமணம் கூடி வரும். அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். குடும்பத்தில், பிரிந்திருந்தவர்கள் ஒன்று சேருவீர்கள். இந்த வருடத்தில் வாரிசு உருவாகும். ஆரோக்கியம் சீராகும். அடகிலிருந்த நகை, சொத்தையெல்லாம் மீட்க வழி, வகை பிறக்கும். வங்கிக் கடன் உதவி கிடைக்கும். எதிர்த்தவர்கள் நண்பர்களாவார்கள்.

சொந்தபந்தங்களின் சுயரூபத்தை தெரிந்துக் கொண்டு அதற்கேற்ப இனி செயல்படுவீர்கள். 14.12.2017 வரை சனி 8-ல் நின்று அஷ்டமத்துச் சனியாக வருவதால் அவ்வப்போது கோபப்படுவீர்கள். ஏமாந்து போன தொகையை நினைத்து வருத்தப்படுவீர்கள். மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். தாழ்வுமனப்பான்மை தலைத்தூக்கும். பெரிய நோய்கான அறிகுறிகளெல்லாம் இருப்பதைப் போல் தோன்றும். ஆனால் மருத்துவப் பரிசோதனை செய்யும் போது பெரிய பாதிப்புகள் இருக்காது. கொழுப்புச் சத்துள்ள உணவுகளை தவிர்ப்பது நல்லது. 15.12.2017 முதல் சனி 9-ம் வீட்டில் அமர்வதால் எதிலும் ஒரு தெளிவு பிறக்கும்.

மற்றவர்களின் மனநிலையைப் புரிந்துப் பேசும் பக்குவம் உண்டாகும். நெருடலான, தர்ம சங்கடமான சூழ்நிலைகளெல்லாம் நீங்கும். வியாபாரத்தில் அதிக முதலீடு செய்து சிக்கிக் கொள்ளாதீர்கள். செப்டம்பர் மாதம் முதல் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் அலுவலகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். மற்றவர்கள் செய்யும் தவறுகளை தட்டிக் கேட்கப்போய் சக ஊழியர்களுடன் மனத்தாங்கல் வரும்.
குடும்பத்தினருக்கு
ஆகஸ்ட் மாதம் வரை குரு சரியில்லாததால் பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பாங்க. கல்யாணம், உத்யோகம் கொஞ்சம் தள்ளிப்போகும் அதற்குப் பரிகாரமாக பக்கத்தில் இருக்கும் பழமையான சிவாலயத்தில் நவகிரகத்தில் இருக்கும் குருபகவானுக்கு வியாழக்கிழமைகளில் நெய் விளக்கேற்றுங்கள். ஆகஸ்ட் மாதத்திலிருந்து ராகு சரியில்லாததால் தாயாருடன் சின்னச் சின்ன மோதல் வரும். வண்டியை கவனமாக ஓட்டுங்கள் முடிந்தால் ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு விளக்கேற்றுங்கள். வருடம் முழுக்க அஷ்டமத்துச் சனி இருப்பதால் நரசிம்மரை சனிக்கிழமைகளில் வணங்குங்கள்.

உங்கள் குடும்பத்தில் விருச்சிகம், தனுசு, கும்ப ராசியில் கணவரோ, பிள்ளைகளோ இருந்தால் பாதிப்புகள் அதிகமாகும். ஆனால் கடகம், சிம்மம், மகரம், மீன ராசியில் இருந்தால் யோகப் பலன் அதிகரிக்கும். மேலும் குடும்பத்தில் அனைவருக்கும் சுபிட்சம் உண்டாக கீழ்கண்ட சூரியகிரகத்தின் சூட்சமமந்திர வடிவத்தை பூஜையறையில் மாகோலமிட்டு ஞாயிற்றுக்கிழமைகளில் வணங்கி வாருங்கள்.

ரிஷபம்

கடந்து வந்த பாதையை மறக்காதவர்களே! உங்களுடைய 9-வது ராசியில் இந்தாண்டு பிறப்பதால் பணவரவு உயரும். எதிர்ப்புகள் அகலும். கடன் பிரச்சினையிலிருந்து விடுபடுவதற்காக ஓயாமல் உழைப்பீர்கள். முகப்பொலிவு, ஆரோக்யம் கூடும். வீட்டில் சுபகாரியங்கள் நடக்கும். வாகனத்தை மாற்றுவீர்கள். பூர்வீகச் சொத்தை சீர் செய்வீர்கள். உங்கள் ரசனைக்கேற்ப வீடு அமையும். உறவினர் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். எதிர்பார்த்த பணம் வரும். 14.12.2017 வரை ராசிக்கு 7-ம் வீட்டில் சனி நிற்பதால் எதையும் திட்டமிட்டு செய்யப்பாருங்கள். குடும்ப அந்தரங்க விஷயங்களில் மற்றவர்கள் தலையிட அனுமதிக்காதீர்கள்.

புதிய நண்பர்களை வீட்டிற்கு அழைத்து வர வேண்டாம். யாருக்கும் ஜாமீன், உத்தரவாதக் கையெழுத்திட வேண்டாம். நம்பிக்கைக்குரியவராக இருந்தாலும் ரகசியங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டாம். வருங்காலத்தை மனதில்கொண்டு சேமித்து வைத்துக் கொள்ளுங்கள். பூர்வீகச் சொத்துப் பிரச்சனைகள் தலை தூக்கும். கணவன், மனைவிக்குள் விட்டுக்கொடுத்து போவது நல்லது. மனைவி வழி உறவினர்களுடன் கருத்து மோதல்கள் வரக்கூடும்.

மகனுக்கோ, மகளுக்கோ வாழ்க்கைத்துணை தேடுபவர்கள் நிச்சயதார்த்தத்திற்கும், திருமணத்திற்கும் அதிகம் இடைவெளி தராமல் உடனே முடிப்பது நல்லது. யாருக்கும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். 26.7.2017 வரை உங்கள் ராசிக்கு 10-ல் கேதுவும், 4-ம் வீட்டில் ராகுவும் நீடிப்பதால் அடுக்கடுக்கான வேலைகளால் அவதிக்குள்ளாவீர்கள். தாயாருக்கு முதுகு தண்டு வடத்தில் வலி, தலைச்சுற்றல் வந்து செல்லும். அலைபேசியில் பேசிக்கொண்டே வாகனத்தை இயக்க வேண்டாம். சிலர் வீடு மாற வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாவீர்கள். ஜுலை 27-ம் தேதி முதல் ராசிக்கு 9-ம் வீட்டில் கேது தொடர்வதால் பிதுர்வழிச் சொத்துப் பிரச்சினை தலைதூக்கும்.

தந்தையாருடன் மனஸ்தாபங்கள் வரக்கூடும். அவருக்கு சிறுசிறு அறுவை சிகிச்சைகள் வந்து செல்லும். செலவுகள் அதிகமாகிக்கொண்டே போகும். ஆனால் ராகு 3-ம் வீட்டில் அமர்வதால் பயம், படபடப்பு நீங்கும். தைரியம் கூடும். ஷேர் மூலம் பணம் வரும். வீட்டு மனை வாங்கும் யோகம் உண்டாகும். வெளிவட்டாரத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். வீட்டில் தடைப்பட்டு வந்த சுப நிகழ்ச்சிகளெல்லாம் அடுத்தடுத்து நடந்தேறும். தைரியமாக சில முக்கிய முடிவுகளெல்லாம் எடுப்பீர்கள். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். சிலர் அயல்நாடு சென்று வருவீர்கள்.

01.09.2017 வரை குரு உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டில் நிற்பதால் கல்வியாளர்கள், அறிஞர்களின் நட்பால் தெளிவடைவீர்கள். குடும்பத்தில் நல்லது நடக்கும். குழந்தை பாக்யம் கிடைக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனின் உயர்கல்வி, உத்யோகம், திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் பலிதமாகும். குடும்பத்தினருடன் குலதெய்வக் கோவிலுக்குச் சென்று நேர்த்திக் கடனை செலுத்துவீர்கள். பூர்வீக சொத்துப் பங்கை கேட்டு வாங்குவீர்கள். பிள்ளைகள் உங்கள் அருமையைப் புரிந்துக் கொள்வார்கள். உறவினர்கள் தேடி வருவார்கள். நட்பு வட்டம் விரிவடையும். ஆனால் 02.9.2017 முதல் குரு 6-ம் வீட்டில் அமர்வதால் சின்னச் சின்ன காரியங்களைக் கூட இரண்டு, மூன்று முறை முயன்று முடிக்க வேண்டி வரும்.


எதிர்காலம் பற்றிய கவலைகள் வந்து விலகும். வி.ஐ.பிகளைப் பகைத்துக் கொள்ளாதீர்கள். சின்னச் சின்ன அவமானங்கள் ஏற்படக்கூடும். பழைய கடனை நினைத்து அவ்வப்போது கலங்குவீர்கள். குடும்பத்தில், கணவன்,மனைவிக்குள் ஈகோவால் பிரிவுகள் வரக்கூடும். எனவே அனுசரித்து போகப் பாருங்கள். உடல் ஆரோக்கியத்திலும் கூடுதல் கவனம் செலுத்தப்பாருங்கள். நோய்த் தொற்று வர வாய்ப்பிருக்கிறது. வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி லாபம் சம்பாதிப்பீர்கள். சின்னச் சின்ன நட்டங்கள் இருக்கும். உத்யோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். என்றாலும் கொஞ்சம் வேலைச்சுமை, டென்ஷன் இருக்கத்தான் செய்யும்.

குடும்பத்தினருக்கு
சனியின் போக்கு இந்த வருடம் முழுக்க சரியில்லாமல் இருப்பதால் சனிக்கிழமை தோறும் ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று வாருங்கள். முடிந்தால் வெற்றிலை மாலை சாற்றுங்கள். அதனால் கணவர், பிள்ளைகளுடன் இருக்கும் கருத்து மோதல்கள் விலகி நிம்மதி உண்டாகும். செப்டம்பர் மாதம் முதல் குரு மறைவதால் பிள்ளைகளுக்கு வாழ்க்கைத்துணையை தேர்ந்தெடுக்கும் விஷயத்தில் அவசரம் வேண்டாம். பிள்ளைகளுக்கு எல்லாம் கிடைக்க ஸ்ரீரங்கநாதரை தாமரை மலர் தந்து வணங்குவது நல்லது.

உங்கள் குடும்பத்தில் மேஷம், துலாம், விருச்சிகம், தனுசு ராசியில் கணவரோ, பிள்ளைகளோ இருந்தால் பாதிப்புகள் அதிகமாகும். ஆனால் கடகம், கன்னி, மகரம், மீன ராசியில் இருந்தால் யோகப் பலன் கிடைக்கும். மேலும் குடும்பத்தில் அனைவருக்கும் நல்லது நடக்க கீழ்கண்ட சந்திர கிரகத்தின் சூட்சமமந்திர வடிவத்தை பூஜையறையில் மாகோலமிட்டு திங்கட்கிழமைகளில் வணங்கி வாருங்கள்.

மிதுனம்

தீவிர யோசனைக்குப் பின் முடிவெடுப்பவர்களே! 14.12.2017 வரை சனிபகவான் உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டிலேயே பலம் பெற்று நீடிப்பதால் பிரச்சனைகள் எதுவானாலும் அவற்றையெல்லாம் சமாளிக்கக் கூடிய மனோபலம் உங்களுக்கு கிடைக்கும். முன்னேற்றப்பாதையை நோக்கி பயணிப்பீர்கள். கணவன், மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவீர்கள். வீண் சந்தேகம் விலகும். குடும்ப வருமானம் உயரும். வங்கிக் கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். விலை உயர்ந்த ஆபரணங்கள் வீடு வந்து சேரும். நாடாளுபவர்கள், வேற்று மொழிக்காரர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். உங்களுக்கு 8-வது ராசியில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். திடீர் பயணங்கள் அதிகரிக்கும்.

அவ்வப்போது பணப்பற்றாக்குறையும் வரும். என்றாலும் சமாளித்து விடுவீர்கள். குடும்ப அந்தரங்க விஷயங்களையெல்லாம் வெளியில் சொல்லி ஆறுதல் தேட வேண்டாம். 26.7.2017 வரை உங்கள் ராசிக்கு 9-ல் கேது நிற்பதால் தந்தைக்கு நெஞ்சு வலி வந்து போகும். அவருடன் மனவருத்தங்களும் வரக்கூடும். பிதுர் வழி சொத்து சம்பந்தப்பட்ட விஷயத்தில் இப்போது தலையிட வேண்டாம். அநாவசியச் செலவுகளை கட்டுப்படுத்தப் பாருங்கள். ஆனால் மூன்றாம் இடத்தில் ராகு இருப்பதால் புது முயற்சிகள் பலிதமாகும். இளைய சகோதர வகையில் ஆதரவு பெருகும். வேற்றுமதம், மாற்றுமொழி பேசுபவர்களால் உங்களது வாழ்க்கைத் தரம் ஒரு படி உயரும். புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். அரசால் அனுகூலம் உண்டாகும்.

ஜுலை 27-ம் தேதி முதல் ராசிக்கு 2-ல் ராகுவும், 8-ம் வீட்டில் கேதுவும் தொடர்வதால் வீண் விரயம், அலைச்சல், பொருள் இழப்புகள் வந்து போகும். சாதாரணமாகப் பேசப் போய் சண்டையில் முடிய வாய்ப்பிருக்கிறது. வாகனத்தை இயக்கும் முன் எரிபொருள் இருக்கிறதா, ப்ரேக் இருக்கிறதா எனப் பார்த்துக் கொள்ளுங்கள். அநாவசியமாக மற்றவர்கள் விவகாரத்தில் தலையிட வேண்டாம். வீண் பழிக்கு ஆளாவீர்கள். கண் பார்வையை பரிசோதித்துக் கொள்ளுங்கள். புத்தாண்டின் தொடக்கம் முதல் 01.09.2017 வரை குரு உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் எதிர்ப்புகள் அதிகமாகும். இனம்புரியாத கவலைகள் வந்துபோகும். தாயாருடன் மனஸ்தாபங்கள் வெடிக்கும். வர வேண்டிய பணத்தைப் போராடி வசூலிப்பீர்கள். உறவினர்கள், நண்பர்களுடன் விரிசல்கள் வரக்கூடும். அரசுக்குச் செலுத்த வேண்டிய வரிகளைத் தாமதிக்காதீர்கள்.

வாகனத்தை கொஞ்சம் கவனமாக இயக்குங்கள். விபத்துகள் நிகழக்கூடும். ஆனால் 02.09.2017 முதல் குருபகவான் உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டில் நுழைவதால் பிரிந்திருந்த கணவன், மனைவி ஒன்று சேர்வீர்கள். குழந்தை பாக்யம் உண்டு. பிள்ளைகளால் மதிப்பு, மரியாதை கூடும். மகன் குடும்ப சூழ்நிலையறிந்து பொறுப்பாக நடந்து கொள்வார். வாடகை வீட்டிலிருந்த சிலர் சொந்த வீட்டிற்கு குடி புகுவீர்கள். பூர்வீகச் சொத்துப் பிரச்சினை முடிவுக்கு வரும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். தங்க ஆபரணங்கள், இரத்தினங்கள் வாங்குவீர்கள். சொந்தபந்தங்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். சொந்த ஊர் பொது நிகழ்ச்சிகளையெல்லாம் முன்னின்று நடத்துவீர்கள்.

திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். திடீர் லாபம், பெரிய நிறுவனங்களுடன் புது ஒப்பந்தங்கள் கூடி வரும். உத்யோகத்தில் செப்டம்பர் மாதம் முதல் தேக்க நிலை மாறும். வேலைச்சுமை குறையும்.

குடும்பத்தினருக்கு
ஜூலை மாதம் வரை ராகு உங்களுக்கு சாதகமாக இருப்பதால் கணவர் மற்றும் பிள்ளைளை நன்றாக வழி நடத்துவீர்கள். உங்கள் ஆலோசனைகளையும் ஏற்றுக் கொள்வார்கள். ஆனால் ஆகஸ்ட் வரை குரு சரியில்லாததால் பணத்தட்டுப்பாட்டையும், உறவினர் பகைகளையும் சந்தித்துக் கொண்டிருக்கிறீர்கள் அந்த பாதிப்பு விலக வியாழக்கிழமைகளில் பசுவிற்கு அகத்திக்கீரை அல்லது கேரட் கொடுங்கள்.

உங்கள் குடும்பத்தில் மேஷம், விருச்சிகம், தனுசு ராசியில் கணவரோ, பிள்ளைகளோ இருந்தால் பாதிப்புகள் அதிகமாகும். ஆனால் சிம்மம், கன்னி, மீன ராசியில் இருந்தால் யோகப் பலன் கிடைக்கும். மேலும் குடும்பத்தில் அனைவருக்கும் லட்சுமி கடாட்சம் கிடைக்க கீழ்கண்ட சுக்கிர கிரகத்தின் சூட்சமமந்திர வடிவத்தை பூஜையறையில் மாகோலமிட்டு வெள்ளிக்கிழமைகளில் வணங்கி வாருங்கள்.

மகரம், கும்பம் மற்றும் மீனம்


மகரம்
பிரதிபலன் பாராமல் உதவுபவர் களே! புத்தாண்டு பிறக்கும் போது சனிபகவான் உங்களின் லாப வீட்டில் தொடர்வதால் திடீர் யோகம், பணப்புழக்கம் அதிகரிக்கும். இனி திட்டமிட்ட காரியங்கள் தடையில்லாமல் முடியும். அதிக வட்டிக்கு வாங்கியிருந்த கடனையெல்லாம் பைசல் செய்வீர்கள். வழக்கு சாதகமாகும். அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். சொத்து சம்பந்தப்பட்ட வழக்குகள் வெற்றியடையும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள்.

வெளிவட்டாரத்தில் மதிப்பு, மரியாதை கூடும். தங்க ஆபரணங்கள் வாங்குவீர்கள். நாடாளுபவர்கள் உதவுவார்கள். கோவில் கும்பாபிஷேக திருப்பணி கமிட்டியில் இடம் பிடிப்பீர்கள். அதிக மைலேஜ் தரக் கூடிய வாகனம் வாங்குவீர்கள். ஆனால் வருடத்தின் இறுதியில் 15.12.2017 முதல் சனி 12-ல் மறைந்து ஏழரைச் சனியின் தொடக்கமான விரயச் சனி தொடங்குவதால் தூக்கமில்லாமல் போகும். பழைய கசப்பான சம்பவங்களை மறப்பது நல்லது. உங்கள் பலம், பலவீனமறிந்து செயல்படப் பாருங்கள். முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடும் முன் சட்ட நிபுணர்களை கலந்தாலோசிப்பது நல்லது. உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம்.

26.7.2017 வரை உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டில் கேதுவும், 8-ல் ராகுவும் அமர்ந்திருப்பதால் சின்னதாக ஒரு வெறுப்பு, சலிப்பு வந்து போகும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான பிரச்சினைகளும், போராட்டங்களும் இருந்துக் கொண்டேயிருக்கும். அடிமனதில் ஒருவித பயமும் வந்துப் போகும். அவ்வப்போது தாழ்வு மனப்பான்மை தலைத்தூக்கும். கொந்தளித்து வார்த்தைகளைக் கொட்டி விடாதீர்கள். பார்வைக் கோளாறு, பல் வலி, காது வலி மற்றும் கால் வலி வந்து செல்லும். அவசர முடிவுகளெல்லாம் எடுக்க வேண்டாம்.

27.7.2017 முதல் வருடம் முடியும் வரை உங்கள் ராசிக்குள்ளேயே கேது பகவானும், ராசிக்கு 7-ம் வீட்டில் ராகுவும் அமர்ந்திருப்பதால் மற்றவர்களைச் சார்ந்து இருக்க வேண்டாம். தூக்கம் குறையும். யாரையும் எளிதில் நம்பி ஏமாற வேண்டாம். கணவன் மனைவிக்குள் வீண் சந்தேகம், ஈகோ பிரச்னையால் பிரிவு வரக்கூடும். களவு போக வாய்ப்பிருக்கிறது. எனவே குடும்பத் துடன் வெளியூர் செல்ல நேரிட்டால் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து விட்டு செல்வது நல்லது.

புத்தாண்டின் தொடக்கம் முதல் 01.09.2017 வரை குரு உங்கள் ராசிக்கு 9-ம் வீட்டில் நீடிப்பதால் தன்னம்பிக்கை அதிகமாகும். அனுபவப் பூர்வமாகப் பேசி எல்லோரையும் கவருவீர்கள். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகள் வீட்டில் ஏற்பாடாகும். குழந்தை பாக்யம் கிடைக்கும். உங்கள் ஆலோசனையை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள்.

02.9.2017 முதல் வருடம் முடியும் வரை குரு 10-ம் வீட்டில் அமர்வதால் அவ்வப்போது ஏமாற்றங்களை உணருவீர்கள். வேலைச் சுமையால் டென்ஷன் அதிகரிக்கும். சட்டத்திற்கு புறம்பான வகையில் யாருக்கும் உதவ வேண்டாம். சின்னச் சின்ன மரியாதைக் குறைவான சம்பவங்கள் நிகழக்கூடும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைக் கற்றுக் கொள்வீர்கள். பாக்கிகள் வசூலாகும். அயல்நாட்டிலிருப்பவர்கள், திடீரென்று அறிமுகமாகுபவர்களை நம்பி புது தொழில், புது முயற்சிகளில் இறங்க வேண்டாம். உத்யோகத்தில் செப்டம்பர் மாதம் முதல் விரும்பத்தகாத இடமாற்றமும் இருக்கும். உங்களுடைய உழைப்பைப் பயன்படுத்தி வேறு சிலர் நல்ல பெயரெடுத்து முன்னேறுவார்கள்.
குடும்பத்தினருக்கு
ராகு,கேதுவால் கணவன் மனைவிக்குள் இருக்கும் கருத்து மோதல், கடன் தொந்தரவு, பிள்ளைகளின் பிடிவாதப் போக்கு இவற்றிலிருந்து விடுபட அருகிலிருக்கும் மாரியம்மன் கோயிலுக்கு வெள்ளிக்கிழமைகளில் சென்று எலுமிச்சம் பழ தீபம் ஏற்றி வணங்குங்கள் அத்துடன் காஞ்சி காமாட்சி அம்மன் படத்தை வீட்டில் வைத்து வழிபடுங்கள். உங்கள் குடும்பத்தில் மேஷம், மிதுனம், விருச்சிகம், தனுசு ராசியில் கணவரோ, பிள்ளைகளோ இருந்தால் பாதிப்புகள் அதிகமாகும். ஆனால் ரிஷபம், கடகம், கன்னி, மீன ராசியில் இருந்தால் யோகப் பலன் கிடைக்கும். மேலும் கடன் பிரச்சனை தீர உங்கள் பிரபல யோகாதிபதியாகிய புதன் கிரகத்தின் சூட்சமமந்திர வடிவத்தை பூஜையறையில் மாகோலமிட்டு புதன்கிழமைகளில் வணங்கி வாருங்கள்.

கும்பம்

எப்பொழுதும் யதார்த்தத்தை விரும்புபவர்களே! உங்களுக்கு 12-வது ராசியில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் அலைச்சலும், திடீர் பயணங்களும், அத்தியாவசியச் செலவுகளும் அதிகரிக்கும். உங்கள் ராசிநாதனான சனிபகவான் ராசிக்கு 10-ம் வீட்டிலேயே தொடர்வதால் உங்களிடம் மறைந்து கிடந்த திறமைகள் வெளிப்படும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். வி.ஐ.பிகளின் அறிமுகம் கிடைப்பதுடன் அவர்களால் உதவியும் உண்டு. பணபலம் கூடும். புது பதவிகள், பொறுப்புகள் தேடி வரும். சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு சாதகமான தீர்வு கிடைக்கும். வேலையில்லாமல் வீட்டிலேயே முடங்கிக்கிடந்த உங்கள் மகனுக்கு அயல்நாட்டுத் தொடர்புடைய நிறுவனத்தில் வேலை கிடைக்கும்.

வெளிநாட்டிலிருக்கும் உறவினர், நண்பர்களால் திடீர் திருப்பங்கள் ஏற்படும். உடல் அசதி, மனச்சோர்வு வரும். 15.12.2017 முதல் சனி 11-ம் வீடான லாப வீட்டில் நுழைவதால் திடீர் யோகம், பணவரவு உண்டாகும். கௌரவப் பதவிகள் தேடி வரும். வெளிநாடு சென்று வருவீர்கள். ஷேர் மூலம் பணம் வரும். அரசால் ஆதாயமடைவீர்கள். வேற்றுமதத்தவர், மாற்று மொழியினரால் திடீர் திருப்பம் உண்டாகும். மூத்த சகோதரர் பகையை மறந்து வலிய வந்து பேசுவார். 26.7.2017 வரை உங்கள் ராசிக்குள்ளேயே கேது பகவானும், ராசிக்கு 7-ம் வீட்டில் ராகுவும் நிற்பதால் தலைச்சுற்றல், தூக்கமின்மை, செரிமானக் கோளாறு, வந்துச் செல்லும். குடும்பத்தில் சண்டை, சச்சரவு, கணவன் மனைவிக்குள் மோதல்களெல்லாம் வந்து போகும்.

ஊறுகாய், லாகிரி, வஸ்துக்கள் மற்றும் துரித உணவுகளைத் தவிர்ப்பது நல்லது ஆனால் 27.7.2017 முதல் வருடம் முடியும் வரை உங்கள் ராசியை விட்டு கேது விலகி 12-ம் வீட்டிலும், ராகு 6-ம் வீட்டிலும் அமர்வதால் பெரிய நோய் இருப்பதைப் போன்ற பிரமையிலிருந்து விடுபடு வீர்கள். கணவன் மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். மனைவியின் ஆரோக்கியம் சீராகும். திருமணத் தடைகள் நீங்கும். அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். குழந்தை பாக்யம் கிடைக்கும். ஷேர் மூலம் பணம் வரும். கோவில் கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்துவீர்கள்.

புத்தாண்டின் தொடக்கம் முதல் 01.09.2017 வரை குரு உங்கள் ராசிக்கு 8-ம் வீட்டில் நிற்பதால் வீண் அலைக்கழிப்புகள் அதிகரிக்கும். சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் தீர்ப்பு தாமதமாக வரும். திடீர் பயணங்கள், செலவுகளால் திணறுவீர்கள். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டாம். உங்களுடைய அணுகுமுறையை மாற்றுங்கள். சிக்கலான காரியங்களையெல்லாம் கையில் எடுத்துக் கொண்டிருக்காதீர்கள். பணப்பற்றாக்குறையால் வெளியில் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். ஆனால் 02.9.2017 முதல் வருடம் முடியும் வரை குரு 9-ம் வீட்டிலேயே அமர்வதால் திடீர் அதிர்ஷ்ட, யோகம் உண்டாகும். நீண்ட காலமாக தள்ளிப் போன காரியங்களெல்லாம் முடிவடையும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள்.

ஷேர் மூலமாக பணம் வரும். குடும்பத்திலும் மகிழ்ச்சி உண்டு. குழந்தை பாக்யம் உண்டாகும். வி.ஐ.பிகள் வீட்டு விசேஷங்களில் கலந்துக் கொள்ளுமளவிற்கு நெருக்கமாவீர்கள். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். வங்கி லோன் கிடைக்கும். கைமாற்றாகவும், கடனாகவும் வாங்கியிருந்த பணத்தை ஒருவழியாக தந்து முடிப்பீர்கள். தந்தையுடனான மோதல்கள் விலகும். வேலைக்கு விண்ணப்பித்து காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும்.

தற்காலப் பணியில் இருப்பவர்கள் நிரந்தரமாக்கப்படுவீர்கள்.வியாபாரத்தில் சந்தை நிலவரம் அறிந்து செயல்படுவதால் லாபம் அதிகரிக்கும். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்களுடன் இருந்து வந்த பிணக்குகள் நீங்கும். உத்யோகத்தில் இருந்த அலட்சியப் போக்கு மாறும். கூடுதல் சலுகைகளும் கிடைக்கும். உங்களின் நிர்வாகத் திறமை கூடும்.
குடும்பத்தினருக்கு
கேதுவால் நோய்களையும், ராகுவால் குடும்பத்தில் கணவருடன் சண்டையையும் சந்தித்துக் கொண்டிருக்கிறீர்கள். ஜுலை மாதம் வரை நீடிக்கும் இந்தப் பிரச்சனையிலிருந்து விடுபட சனிக்கிழமைகளில் ஷீரடி சத்ய சாய்பாபாவை தரிசியுங்கள். ஆகஸ்ட் மாதம் வரை 8ல் இருக்கும் குருவால் வழக்கு, கடன் பிரச்சனைகளாலும் நிம்மதி இழப்பீர்கள்.அதிலிருந்து விடுபட திருப்பதி வெங்கடாஜலபதியின் படத்தை வீட்டில் வைத்து வணங்கி வாருங்கள். உங்கள் குடும்பத்தில் கடகம், துலாம், விருச்சிகம், தனுசு ராசியில் கணவரோ, பிள்ளைகளோ இருந்தால் பாதிப்புகள் அதிகமாகும் ஆனால் ரிஷபம், சிம்மம், மீன ராசியில் இருந்தால் யோகப் பலன் கிடைக்கும். மேலும் நோயிலிருந்து விடுபட உங்கள் ராகு கிரகத்தின் சூட்சமமந்திர வடிவத்தை பூஜையறையில் மாகோலமிட்டு வெள்ளிக்கிழமைகளில் வணங்கி வாருங்கள்.

மீனம்
இடம்பெயர்ந்து சென்றாலும் குலப் பெருமையை காப்பவர்களே! உங்கள் ராசிக்கு லாப வீட்டில் சந்திரன் நிற்கும் போது இந்த புத்தாண்டு பிறப்பதால் வருமானம் உயரும். வருங்காலத் திட்டங்கள் பூர்த்தியாகும். கௌரவப் பொறுப்புகள் தேடி வரும். சொந்த ஊரில் மதிக்கப்படுவீர்கள். கோவில் திருவிழாவை முன்னின்று நடத்துவீர்கள். மூத்த சகோதர, சகோதரிகளுடன் இருந்த மனத்தாங்கல் நீங்கும்.

ஷேர், கமிஷன் வகைகளால் பணம் வரும். தம்பியுடன் இருந்த மனவருத்தம் நீங்கும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து இனி சேமிக்கத் தொடங்குவீர்கள். சிலர் இருக்கும் வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவார்கள். வெளிவட்டாரத்தில் மதிப்பு கூடும். கல்யாணம், காதுகுத்து, மஞ்சள் நீராட்டு, கிரகப்பிரவேசம் என பல விசேஷங்களிலும் உங்களுக்கு முதல் மரியாதை கிடைக்கும். கல்வியாளர்கள், அறிஞர்களின் நட்பால் தெளிவடைவீர்கள். சனிபகவான் 9-ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்தாண்டு பிறப்பதால் குடும்ப வருமானத்தை உயர்த்துவீர்கள் அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும்.

பணவரவு உண்டு என்றாலும் சேமிக்க முடியாதபடி செலவுகளும் இருக்கும். மகளின் கல்யாணத்தை வெகு விமரிசையாக நடத்துவீர்கள். மகனுக்கு அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்தில் உயர்கல்வி, உத்யோகம் அமையும். நிலுவையிலிருந்த வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். உறவினர்கள், நண்பர்களின் சுயரூபத்தை தெரிந்துக் கொண்டு அதற்கேற்ப செயல்படுவீர்கள். வெளிவட்டாரத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். புது வேலை அமையும். வெளிநாட்டிலிருப்பவர்களால் ஆதாயமடைவீர்கள்.

ஆனால் தந்தைக்கு நெஞ்சு வலி, அலைச்சல், டென்ஷன் வந்துப் போகும். பிதுர்வழி சொத்துப் பிரச்னைக்கு சுமூகத் தீர்வு காண்பது நல்லது. 26.7.2017 வரை உங்கள் ராசிக்கு 12-ல் கேது தொடர்வதால் உங்களுடைய பலம், பலவீனத்தை உணருவீர்கள். நீண்ட நாட்களாக போக நினைத்த குலதெய்வ கோவிலுக்கு குடும்பத்தினருடன் சென்று நேர்த்திக் கடனைச் செலுத்துவீர்கள். ஆனால் ராகு 6-ம் வீட்டில் நிற்பதால் எதிலும் வெற்றி பெறுவீர்கள். சொந்த பந்தங்கள் மதிக்கும்படி நடந்துக் கொள்வீர்கள். பால்ய நண்பர்களால் உதவிகள் கிடைக்கும்.

27.7.2017 முதல் வருடம் முடியும் வரை கேது லாப வீட்டில் அமர்வதால் செல்வாக்கு கூடும். கௌரவப் பதவிகள் தேடி வரும். அரசால் அனுகூலம் உண்டாகும். ஹிந்தி, மலையாளம் பேசுபவர்களால் மாற்றம் உண்டாகும். தடைபட்டு வந்த சுப நிகழ்ச்சிகளெல்லாம் அடுத்தடுத்து நடந்தேறும். ஆனால் ராகு 5-ம் வீட்டில் நிற்பதால் தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் திணறுவீர்கள். பிள்ளைகளின் பொறுப்பற்றப் போக்கை நினைத்து வருந்துவீர்கள். மகளின் திருமணத்திற்காக வெளியில் கடன் வாங்க வேண்டி வரும். பூர்வீக சொத்துப் பிரச்னை வெடிக்கும். கர்ப்பிணிப் பெண்கள் பயணங்களை தவிர்க்கப்பாருங்கள். புத்தாண்டின் தொடக்கம் முதல் 01.09.2017 வரை உங்கள் குருபகவான் 7-ம் வீட்டில் அமர்ந்து உங்களைப் பார்ப்பதால் உங்களின் தனித்திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். அழகு, அறிவு கூடும்.

கணவன் மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். மகளின் திருமணத்தை ஊரே மெச்சும்படி சிறப்பாக நடத்தி முடிப்பீர்கள். மகனுக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். ஒத்து வராத, உதவாத, உண்மையில்லாத உறவுகளை ஒதுக்கித் தள்ளுவீர்கள். விலை உயர்ந்த தங்க ஆபரணம் வாங்குவீர்கள். மனைவிவழியில் செல்வாக்கு கூடும். ஆனால் 02.9.2017 முதல் வருடம் முடியும் வரை குரு 8-ம் வீட்டில் மறைவதால் உங்களைப் பற்றிய வதந்திகள் வரும். வீண் அலைக்கழிப்புகளும் அதிகமாகும். திடீர் பயணங்கள் இருக்கும். முக்கிய ஆவணங்களை கவனக்குறைவாக கையாள வேண்டாம். தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும்.

பணம், நகை வாங்கித் தருவதில் குறுக்கே நிற்காதீர்கள். செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். பழைய சரக்குகளை தள்ளுபடி விலைக்கு விற்றுத் தீர்ப்பீர்கள். உத்யோகத்தில் செப்டம்பர் மாதம் முதல் அலுவலகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். பணிகளை கொஞ்சம் போராடி முடிக்க வேண்டி வரும்.
குடும்பத்தினருக்கு
12ல் நிற்கும் கேதுவால் ஏற்படும் வீண் செலவுகளை கட்டுப்படுத்த ஞாயிற்றுக்கிழமையில் ராகவேந்திரரை தரிசியுங்கள். செப்டம்பர் மாதம் முதல் குரு 8-ல் மறைவதால் குடும்பத்தில் திடீர் செலவு, பயணங்கள், பணம் கொடுத்து ஏமாறுதல் இவற்றிலிருந்து விடுபட லட்சுமி படத்தை வீட்டில் வைத்து வழிபடுங்கள். உங்கள் குடும்பத்தில் மேஷம், சிம்மம், துலாம், விருச்சிகம், தனுசு ராசியில் கணவரோ, பிள்ளைகளோ இருந்தால் பாதிப்புகள் அதிகமாகும். ஆனால் கடகம், மகர ராசியில் இருந்தால் யோகப் பலன் கிடைக்கும். மேலும் தோற்றப்பொலிவு கூட சந்திர கிரகத்தின் சூட்சமமந்திர வடிவத்தை பூஜையறையில் மாகோலமிட்டு திங்கட்கிழமைகளில் வணங்கி வாருங்கள்.

துலாம், விருச்சிகம் மற்றும் தனுசு


துலாம்
எதையும் கலை நயத்துடன் செய்யக் கூடியவர்களே! இந்தாண்டு முழுக்க சனிபகவான் ராசிக்கு 2-ம் வீட்டில் அமர்ந்து பாதச் சனியாகத் தொடர்வதால் வீண் வாக்குவாதங்களையெல்லாம் தவிர்க்கப்பாருங்கள். பல் வலி வந்து போகும். காலில் அவ்வப் போது அடிபடும். பொது இடங்களில் யாரையும் தாக்கிப் பேச வேண்டாம். திடீர் பணவரவு, செல்வாக்கு எல்லாம் உண்டு. இருந்தாலும் வரவுக்கு மிஞ்சிய செலவுகளும் இருக்கத்தான் செய்யும். வழக்கில் வழக்கறிஞரை மாற்றுவீர்கள். உங்களின் நிதி நிலை தெரியாமல் உறவினர்கள், நண்பர்களில் சிலர் பண உதவி கேட்டு தொந்தரவு தருவார்கள்.

உங்களுக்கு சுக வீட்டில் இந்தாண்டு பிறப்பதால் மனதில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் ஏற்படும். கல்யாணம், சீமந்தம், காதுகுத்து என வீடு களைகட்டும். பழைய சொந்த பந்தங்கள் தேடி வருவார்கள். 26.7.2017 வரை உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டில் கேது நிற்பதால் பிள்ளைகளின் எதிர்பார்ப்புகள் அதிகமாகிக் கொண்டே போகும். அவர்களை அன்பாக நடத்துங்கள். உங்களுடைய கனவுகளை அவர்கள் மீது திணிக்க வேண்டாம். கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம்.

ராகு லாப வீட்டில் நிற்பதால் வசதி, வாய்ப்புகள் ஒரளவு பெருகும். ஷேர் மூலம் பணம் வரும். கடந்த கால இனிய அனுபவங்களை நினைவுக்கூர்ந்து மகிழ்வீர்கள். புது பதவி, பொறுப்புகள் தேடி வரும். மூத்த சகோதர வகையில் ஆதரவுக் கிட்டும். சமூக சேவையில் ஈடுபாடு அதிகரிக்கும். பயணங்களால் புத்துணர்ச்சிப் பெறுவீர்கள். ஆனால் 27.7.2017 முதல் வருடம் முடியும் வரை கேது 4-ம் வீட்டிலும், ராகு 10-ம் இடத்திலும் அமர்வதால் சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும்.

ஒரே நாளில் முக்கியமான நான்கைந்து வேலைகளைப் பார்க்க வேண்டி வரும். இதை முதலில் முடிப்பதா, அதை முதலில் முடிப்பதா என்ற ஒரு டென்ஷன் இருக்கும். புறநகர் பகுதியில் இடம் வாங்கி வைத்திருப்பவர்கள் அவ்வப்போது உங்களுடைய இடத்தை கண்காணித்து வருவது நல்லது. ட்ரைவிங் லைசன்ஸ், பாஸ்போர்ட் இவற்றையெல்லாம் புதுப்பிக்கத் தவறாதீர்கள். அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளையும் உடனுக்குடன் செலுத்துவது நல்லது. உங்களுடைய அடிப்படை நடத்தைகளை மாற்றிக் கொள்ளாதீர்கள். உங்களுடைய தனித்தன்மையை இழந்து விடாதீர்கள்.

பெரிய விஷயங்களில் தன்னிச்சையாக முடிவெடுக்காமல் குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து முடிவெடுக்கப் பாருங்கள். முடிந்த வரை இரவு நேரப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. தாயாருக்கு கழுத்து எலும்புத் தேய்வு, மூட்டு வலி, கை, கால் வலி, அசதி வந்து போகும். அவருடன் மனத்தாங்கலும் வரக்கூடும். புத்தாண்டின் தொடக்கம் முதல் 01.09.2017 வரை குரு உங்கள் ராசிக்கு 12-ம் வீட்டில் மறைந்து நிற்பதால் திடீர் பயணங்களால் அலைச்சல், செலவுகள் இருக்கும். சிக்கனமாக இருக்கலாம் என்று நீங்கள் எப்போது திட்டமிட்டாலும் முடியாமல் போகும். தூக்கமின்மை, கனவுத் தொல்லை, ஒருவித படபடப்பு வந்து செல்லும். உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களையெல்லாம் நீங்களே எடுத்து நடத்துவீர்கள். கோவில் கும்பாபிஷேகத்தில் முதல் மரியாதை கிடைக்கும்.

ஆனால் 02.9.2017 முதல் வருடம் முடியும் வரை குரு உங்கள் ராசிக்குள் நுழைந்து ஜென்ம குருவாக அமர்வதால் ஒரு தேடலும், நிம்மதியற்ற போக்கும் அதிகரிக்கும். அவ்வப்போது கோபப்படுவீர்கள். சாப்பாட்டில் உப்பை குறையுங்கள். இரத்த அழுத்தம் அதிகமாகும். பெரிய நோய் இருப்பதாக நினைத்து பயம் வரும். மருத்துவக் காப்பீடு எடுத்துக் கொள்ளுங்கள். அல்சர், மஞ்சள் காமாலை, வாயுக் கோளாறால் நெஞ்சு வலி, யூரினரி இன்பெக்ஷன் வரக்கூடும். உணவில் காய்கறிகள், பச்சை கீரை வகைகளை சேர்த்துக் கொள்ளுங்கள். தண்ணீரைக் காய்ச்சி அருந்துங்கள்.
வீண் சந்தேகம், ஈகோ பிரச்னையால் கணவன், மனைவிக்குள் பிரிவு ஏற்படக்கூடும். முதுகுக்குப் பின்னால் விமர்சிப்பவர்களைப் பற்றி கவலைப்படாதீர்கள். வியாபாரத்தில் ஏற்ற இறக்கங்கள் இருந்து கொண்டேயிருக்கும். லாபம் சுமாராக இருக்கும். சின்ன சின்ன நட்டங்களும், ஏமாற்றங்களும் வரும். உத்யோகத்தில் நாளுக்கு நாள் வேலைச்சுமை கூடிக் கொண்டே போகும். அலுவலக ரகசியங்களை வெளியே சொல்ல வேண்டாம்.
குடும்பத்தினருக்கு
பாதச்சனி தொடர்வதால் காலில் வலி, சின்னச் சின்ன அவமானங்கள் வந்த வண்ணம் இருக்கும் அதிலிருந்து உங்களைக் காத்துக் கொள்ள உங்கள் குலதெய்வ கோயிலுக்கு ஒரு முறை சென்று வருவதுடன் புதன்கிழமை தோறும் மீனாட்சி அம்மனின் படத்தை வீட்டில் வைத்து வழிபடுங்கள். உங்கள் குடும்பத்தில் மேஷம், ரிஷபம், கடகம், கும்ப ராசியில் கணவரோ, பிள்ளைகளோ இருந்தால் பாதிப்புகள் அதிகமாகும் ஆனால் ரிஷபம், கடகம், சிம்மம், மகரம் ராசியில் இருந்தால் யோகப் பலன் கிடைக்கும். மேலும் பிள்ளைகள் கல்வியில் உயர்ந்து விளங்க கீழ்கண்ட புதன் கிரகத்தின் சூட்சமமந்திர வடிவத்தை பூஜையறையில் மாகோலமிட்டு புதன்கிழமைகளில் வணங்கி வாருங்கள்.

விருச்சிகம்

கொள்கை, கோட்பாடு களை விட்டுக் கொடுக்காதவர்களே! உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டில் இந்த புத்தாண்டு பிறப்பதால் துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். புதியவர்கள் அறிமுகமாவார்கள். வர வேண்டிய பணமெல்லாம் கைக்கு வரும். வருங்காலத்திற்காக சேமிக்கத் தொடங்குவீர்கள். வழக்குகள் சாதகமாக முடியும். ஜென்மச் சனி தொடர்வதால் உடல் நலத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள்.

மருத்துவக்காப்பீடு எடுத்துக் கொள்ளுங்கள். ஜெனரல் செக்கப் செய்து கொள்வது நல்லது. வறுத்த, பொரித்த மற்றும் அசைவ உணவுகளை தவிர்த்து விடுவது நல்லது. வாயுக் கோளாறால் நெஞ்சு வலி, செரிமானக் கோளாறு வரும். மனைவிவழியில் கொஞ்சம் அலைச்சலும், செலவும் இருக்கும். நீங்கள் பெருந்தன்மையாக நடந்து கொண்டாலும் சிலர் உங்களை குறை கூறுவார்கள்.

நெருங்கிய உறவினர்கள், நண்பர்களாக இருந்தாலும் யாருக்கும் ஜாமீன், உத்தரவாதக் கையெழுத்திட வேண்டாம். நாடாளுபவர்கள், பிரபலங்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். ரத்தத்தில் சர்க்கரையின் அளவைப் பரிசோதித்துக் கொள்ளுங்கள். உடல் எடை கூடும். பணப்புழக்கம் இருந்தாலும் வெளியில் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலையும் ஏற்படும். 26.7.2017 வரை உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டில் கேது பகவானும், ராசிக்கு 10-ம் வீட்டில் ராகுவும் நிற்பதால் வாகன விபத்துகள், காரிய தாமதம், வீண் அலைச்சல், டென்ஷன் வந்து போகும். தாயாருக்கு கை, கால் வலி, சோர்வு வந்து நீங்கும். வீடு, மனை வாங்குவது, விற்பதில் வில்லங்கம் வந்து விலகும். சின்னச் சின்ன மரியாதைக் குறைவான சம்பவங்கள் நிகழக்கூடும். 27.7.2017 முதல் வருடம் முடியும் வரை கேது 3-ம் வீட்டில் அமர்வதால் புதிய முயற்சிகள் பலிதமாகும்.

உங்களுக்குள் ஒரு சுயக்கட்டுப்பாட்டை ஏற்படுத்திக் கொள்வீர்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். இளைய சகோதர வகையில் ஆதாயமடைவீர்கள். ஆனால் ராகு 9-ம் வீட்டில் நிற்பதால் சேமிப்புகள் கரையும். தந்தையின் ஆரோக்கியம் பாதிக்கும். பிதுர்வழி சொத்தைப் பெறுவதில் தடைகள் வந்து நீங்கும். உங்களை அறியாமலேயே தாழ்வுமனப்பான்மை தலைதூக்கும். வேற்றுமொழி பேசுவர்கள், வேற்று மதத்தைச் சார்ந்தவர்கள், வெளிநாட்டிலிருப்பவர்களால் ஆதாயமடைவீர்கள்.

புத்தாண்டின் தொடக்கம் முதல் 01.09.2017 வரை குரு உங்கள் ராசிக்கு லாப வீட்டில் நிற்பதால் உங்களின் புகழ், கௌரவம் ஒருபடி உயரும். பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். தொடங்கிய பணிகள் உடனே முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். வருமானத்தை உயர்த்த புது வழிகளில் முயற்சி செய்வீர்கள். திடீர் யோகம், பணவரவு உண்டு. பழைய கடனில் ஒருபகுதியைத் தீர்க்க வழி பிறக்கும். மூத்த சகோதரர் முன் வந்து உதவுவார். பெரிய பதவிகள் தேடி வரும். தடைபட்ட வீடு கட்டும் பணியை தொடர்வீர்கள்.

தூரத்து சொந்த பந்தங்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். ஆனால் 02.9.2017 முதல் வருடம் முடியும் வரை குருபகவான் உங்களுடைய ராசிக்கு 12-ம் வீட்டில் சென்று மறைவதால் திடீர் பயணங்கள், செலவுகள் அதிகரிக்கும். ஒரே நேரத்தில் நான்கைந்து வேலைகளையும் சேர்த்துப் பார்க்க வேண்டி வரும். ஆடம்பரச் செலவுகளை குறைக்கப்பாருங்கள். நன்கு அறிமுகமாகாதவர்களை வீட்டில் சேர்க்க வேண்டாம். நீண்ட நாட்களாக தரிசிக்க நினைத்த புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள்.

கோவில் கும்பாபிஷேகம் மற்றும் சகோதரர்கள், உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களையெல்லாம் நீங்களே செலவு செய்து முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் ஜென்மச் சனி தொடர்வதால் புது தொழில் தொடங்கும் முயற்சிகள், பெரிய முதலீடுகள் வேண்டாம். போட்டிகளைச் சமாளிக்க புது திட்டங்களை நடைமுறைப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் ஜூலை 26-ம் தேதி வரை சின்னச் சின்ன அலைகழிப்புகள் இருக்கும். சம்பள பாக்கி கைக்கு வரும்.
குடும்பத்தினருக்கு
ஜுலை மாதம் வரை ராகு, கேதுவால் காரியத்தடைகள், வாகனப் பழுது மற்றும் விபத்துகள் நிகழும். அதிலிருந்து உங்களை காத்துக் கொள்ள அருகிலிருக்கும் முருகர் கோவிலுக்கு சஷ்டி திதியில் வணங்குவதுடன் திருத்தணி முருகர் படத்தை வீட்டில் வைத்து செவ்வாய்க்கிழமைகளில் வணங்கி வாருங்கள். உங்கள் குடும்பத்தில் மேஷம், மிதுனம், தனுசு ராசியில் கணவரோ, பிள்ளைகளோ இருந்தால் பாதிப்புகள் அதிகமாகும். ஆனால் கடகம், சிம்மம், மகரம், மீன ராசியில் இருந்தால் யோகப் பலன் கிடைக்கும். மேலும் உங்கள் குடும்பத்திற்கு சொந்தமாக வீடு, மனை அமைய கீழ்கண்ட செவ்வாய் கிரகத்தின் சூட்சமமந்திர வடிவத்தை பூஜையறையில் மாகோலமிட்டு செவ்வாய்க்கிழமைகளில் வணங்கி வாருங்கள்.

தனுசு

அழுத்தமாகவும், ஆணித்தரமாகவும் வாதாடுபவர்களே! உங்களுக்கு 2வது ராசியில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் எதிர்பார்த்திருந்த தொகை வந்து சேரும். குடும்பத்தில் அமைதி பிறக்கும். உங்கள் ஆலோசனையை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள். அனுபவப்பூர்வமாகவும், எதார்த்தமாகவும் பேசுவீர்கள். எதிர்பார்த்த வகையில் பணம் வரும். தடைபட்ட பல காரியங்களை முடித்துக் காட்டுவீர்கள். குடும்பத்தில் குழப்பங்களை ஏற்படுத்திய உறவினர்கள், நண்பர்களின் சுயரூபத்தைக் கண்டறிந்து ஒதுக்குவீர்கள்.

கணவன், மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவீர்கள். குடும்ப வருமானத்தை உயர்த்த கூடுதல் நேரம் ஒதுக்கி உழைப்பீர்கள். சனிபகவான் ராசிக்கு 12-ம் வீட்டில் தொடர்வதால் வருங்காலத்தைப் பற்றிய பயம் வந்து நீங்கும். பணவரவு ஓரளவு இருக்கும். எல்லோருக்கும் நல்லது செய்தும் கெட்ட பெயர்தான் மிஞ்சும். சிலர் உங்களைப் பற்றிய வதந்திகளை பரப்பிவிடுவார்கள். இரவு நேரப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. வாகனங்களை இயக்குவதில் கவனம் தேவை. அரசாங்க அதிகாரிகள், வி.ஐ.பிகளுடன் கருத்து மோதல்கள் வரக்கூடும். சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும். நண்பர், உறவினர் சிலர் உங்களை தவறான போக்கிற்குத் தூண்டுவார்கள்.

ரத்த அழுத்தம், சளித்தொந்தரவு, இனந்தெரியாத கவலைகள் வந்து போகும். 26.7.2017 வரை உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டில் கேது நிற்பதால் புதிய முயற்சிகள் யாவும் பலிதமாகும். விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். வாழ்க்கையின் சூட்சுமங்களைக் கற்றுக் கொள்வீர்கள். ஷேர் மூலம் பணம் வரும். வேற்றுமதத்தவர்களால் ஆதாயமடைவீர்கள். இளைய சகோதர வகையில் நன்மை உண்டாகும். கோவில் விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். ராசிக்கு 9-ம் வீட்டில் ராகு நிற்பதால் எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். தந்தையாருக்கு வேலைச்சுமை, வீண் டென்ஷன் அவருடன் பிணக்குகள் வந்து செல்லும். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார், அல்லாதவர்கள் யார் என்பதைப் புரிந்துக் கொள்வதில் குழப்பம் வரும்.

27.7.2017 முதல் வருடம் முடியும் வரை கேது உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டிலும், ராகு 8-ம் வீட்டிலும் அமர்வதால் குடும்பத்தில் சலசலப்புகள் வரும். கணவன் மனைவிக்குள் மனஸ்தாபங்கள் வந்து நீங்கும். எந்த வேலையாக இருந்தாலும் நீங்களே நேரடியாக சென்று முடிப்பது நல்லது. பணம் வாங்கித் தருவதில் குறுக்கே நிற்க வேண்டாம். கண்ணை பரிசோதித்துக் கொள்ளுங்கள். பல் வலி, காது வலி, கணுக்கால் வலி வந்து விலகும். வாகனத்தை நிதானமாக இயக்குங்கள். சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும்.

காலில் அடிப்படும். யாரையும் எடுத்தெறிந்து பேச வேண்டாம். புத்தாண்டின் தொடக்கம் முதல் 01.09.2017 வரை குரு உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டில் நிற்பதால் அடுக்கடுக்கான வேலைகளால் அவதிக்குள்ளாவீர்கள். மறைமுக அவமானம் வந்து நீங்கும். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் வந்து போகும். தர்மசங்கடமான சூழ்நிலையை சமாளிக்க வேண்டி வரும். 02.9.2017 முதல் வருடம் முடியும் வரை குரு 11-ம் வீடான லாபஸ்தானத்தில் அமர்வதால் எங்குச் சென்றாலும் நல்ல வரவேற்பை பெற்றுத் தருவார். கல்வியாளர்களின் நட்பால் தெளிவடைவீர்கள்.

புது சொத்து வாங்குவீர்கள். அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் உயர்கல்வி, உத்யோகம் அமையும். பெரிய பதவிக்கு உங்களுடைய பெயர் பரிந்துரை செய்யப்படும். தாயாரின் உடல் நிலை சீராகும். புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். ஆடை, ஆபரணம் சேரும். அடகு வைத்திருந்த பத்திரம், பழைய கடனையெல்லாம் தீர்க்க புது வழி பிறக்கும். விலகிச் சென்ற உறவினர்களெல்லாம் வலிய வந்து உறவாடுவார்கள். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். செப்டம்பர் மாதம் முதல் வர வேண்டிய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் செப்டம்பர் மாதம் முதல் அலுவலகத்தில் நிம்மதி உண்டாகும். சக ஊழியர்களும் முக்கியத்துவம் தரத் தொடங்குவார்கள்.
குடும்பத்தினருக்கு
ஆகஸ்ட் மாதம் வரை குரு சரியில்லாததால் குடும்பத்தில் மருத்துவச் செலவுகளும், உத்யோகத்தில் வேலைச்சுமையும், விரும்பத்தகாத இடமாற்றமும் வரும். அதிலிருந்து விடுபட அருகிலுள்ள பெருமாள் கோயிலில் இருக்கும் சக்கரத்தாழ்வர் அல்லது சுதர்சனமூர்த்தியை வியாழக்கிழமைகளில் நெய் தீபமேற்றி வணங்குங்கள். உங்கள் குடும்பத்தில் மேஷம், ரிஷபம், கடகம், விருச்சிக ராசியில் கணவரோ, பிள்ளைகளோ இருந்தால் பாதிப்புகள் அதிகமாகும் ஆனால் சிம்மம், துலாம், மீன ராசியில் இருந்தால் யோகப் பலன் கிடைக்கும். மேலும் பணப்பலம் அதிகரிக்க கீழ்கண்ட சூரிய கிரகத்தின் சூட்சமமந்திர வடிவத்தை பூஜையறையில் மாகோலமிட்டு ஞாயிற்றுக்கிழமைகளில் வணங்கி வாருங்கள்.

கடகம், சிம்மம் மற்றும் கன்னி


கடகம்
கள்ளம் கபடமற்ற பேச்சால் கவர்பவர்களே! உங்கள் ராசியை சந்திரன் பார்த்துக் கொண்டிருக்கும் போது இந்தாண்டு பிறப்பதால் மனஇறுக்கம் குறையும். திட்டமிட்டு செயல்படுவீர்கள். வேலையில்லாதவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். பழைய சிக்கல்களுக்கு தீர்வு கிடைக்கும். கணவன் மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். பொது விழாக்கள், கல்யாணம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். 26.7.2017 வரை உங்கள் ராசிக்கு 2ல் ராகுவும், 8ம் வீட்டில் கேதுவும் நிற்பதால் படபடப்பு, எதிலும் பிடிப்பற்றப் போக்கு, பிறர்மீது நம்பிக்கையின்மை, வீண் விரயம் வந்து செல்லும்.

வழக்கில் தீர்ப்பு தள்ளிப் போகும். மற்றவர்களை தாக்கிப் பேச வேண்டாம். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார், கெட்டவர்கள் யார் என்பதைப் புரிந்துக் கொள்வதில் தடுமாற்றம் வரும். 27.7.2017 முதல் வருடம் முடியும் வரை உங்கள் ராசிக்குள் ராகுவும், 7ல் கேதுவும் தொடர்வதால் எதிலும் ஒருவித பயம், ஒற்றைத் தலை வலி, செரிமானக் கோளாறு, வலிப்பு வந்து செல்லும். முன்கோபத்தை தவிர்க்கப்பாருங்கள். வாயுத் தொந்தரவால் நெஞ்சு வலிக்கும். புதிது புதிதாக வரும் விளம்பரங்களை பார்த்து சோப்பு, பற்பசை, ஷாம்பு, வாசனை திரவியங்களையெல்லாம் மாற்றிக் கொண்டிருக்காதீர்கள். அலர்ஜி வரக்கூடும். விஷப் பூச்சிகளான பூரான், பாம்பு, தேள் கடிக்க வாய்ப்பிருக்கிறது. எனவே கவனம் தேவை.

கணவன் மனைவிக்குள் விட்டு கொடுத்து போவது நல்லது. எந்த வேலையாக இருந்தாலும் நீங்களே நேரடியாகச் சென்று முடிப்பது நல்லது. இடைத்தரகர்களை நம்பி பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். புத்தாண்டின் தொடக்கம் முதல் 01.09.2017 வரை குரு உங்கள் ராசிக்கு 3ம் வீட்டில் நிற்பதால் புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று வேலைகளைப் பார்க்க வேண்டிய சூழ்நிலையும் உருவாகும். அவ்வப்போது பலவீனமாக உணருவீர்கள். தாழ்வுமனப்பான்மை தலைத்தூக்கும். கூடாப்பழக்க வழக்க முள்ளவர்களின் நட்பை தவிர்ப்பது நல்லது. இளைய சகோதர வகையில் பிணக்குகள் வரும்.

விமர்சனங்கள் கண்டு அஞ்ச வேண்டாம். ஆனால் 02.9.2017 முதல் வருடம் முடியும் வரை குரு உங்கள் ராசிக்கு 4ம் வீட்டிலேயே அமர்வதால் இழுபறியாக இருந்த காரியங்களெல்லாம் முடிவடையும். அவருக்கு பார்வைக் கோளாறு, முதுகு, மூட்டு வலி, சிறுசிறு அறுவை சிகிச்சைகள் வந்து செல்லும். தாயார், அம்மான், அத்தைவழியில் மனஸ்தாபம் வந்து நீங்கும். வாகனத்தில் செல்லும் போது தலைக்கவசம் அணிந்துச் செல்லுங்கள். சிறுசிறு விபத்துகள் நிகழக்கூடும். தந்தையாரின் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. சொத்து வாங்கும் போதும் சட்ட நிபுணர்களை கலந்தாலோசித்து தாய்ப் பத்திரம், பட்டா, வில்லங்க சான்றிதழ்களையெல்லாம் சரி பார்த்து வாங்குங்கள். செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். அவ்வப்போது கனவு தொல்லையால் தூக்கம் குறையும்.

14.12.2017 வரை சனி 5ல் நிற்பதால் தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்புவீர்கள். மகளின் திருமண விஷயத்தில் அவசரம் வேண்டாம். வரன் வீட்டாரைப் பற்றி நன்கு விசாரித்து முடிக்கப்பாருங்கள். மகன் காரண காரியமேயின்றி கோபப்படுவார். பிள்ளைகள் இன்னும் கொஞ்சம் பொறுப்பாக நடந்துக் கொண்டால் நலமாக இருக்குமே என்று ஆதங்கப்படுவீர்கள். கர்ப்பிணிப் பெண்கள் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. 15.12.2017 முதல் 6ம் வீட்டில் சனிபகவான் அமர்வதால் எதிர்ப்புகள் அடங்கும். பிள்ளைகளின் பொறுப்பற்ற போக்கு மாறும். வியாபாரத்தில் ஆழம் தெரியாமல் காலை விடாதீர்கள். பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். வேலையாட்களை அவர்கள் போக்கிலேயே விட்டுப்பிடிப்பது நல்லது. உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும்.
குடும்பத்தினருக்கு
இந்த வருடம் முழுக்க ராகுவும், கேதுவும் உங்களுக்கு சரியில்லாததால் நீங்கள் சாதாரணமாகப் பேசுவது கூட குடும்பத்தில் உள்ள மாமியார், நாத்தனார் தவறாக புரிந்துக்கொள்வார்கள் இதுபோன்ற சங்கடங்கள் விலக அருகிலுள்ள புற்றுக்கோயிலுக்கு மாதம் ஒரு வெள்ளிக்கிழமை ராகுகாலத்தில் சென்று விளக்கேற்றுங்கள். உங்கள் குடும்பத்தில் விருச்சிகம், தனுசு, கும்ப ராசியில் கணவரோ, பிள்ளைகளோ இருந்தால் பாதிப்புகள் அதிகமாகும். ஆனால் ரிஷபம், கன்னி, மீன ராசியில் இருந்தால் யோகப் பலன் கிடைக்கும். மேலும் நல்வாழ்வு அமைய கீழ்கண்ட குருபகவான் கிரகத்தின் சூட்சமமந்திர வடிவத்தை பூஜையறையில் மாகோலமிட்டு வியாழக்கிழமைகளில் வணங்கி வாருங்கள்.

சிம்மம்

எதிலும் உடனடித் தீர்வை விரும்புபவர்களே! உங்கள் ராசிக்கு 6வது வீட்டில் 2017-ம் ஆண்டு பிறப்பதால் எதிரிகளை வீழ்த்தும் வல்லமை உண்டாகும். கறாராகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். ஆடம்பரச் செலவுகளை குறைப்பீர்கள். சேமிக்கும் அளவிற்கு வருவாய் அதிகரிக்கும். பழுதான சாதனங்களை மாற்றுவீர்கள். அடிப்படை வசதிகள் பெருகும். கணவன் மனைவிக்குள் பாசம் அதிகரிக்கும்.

மனைவிவழி உறவினர்களால் ஆதாயமுண்டு. பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். என்றாலும் திடீர் பயணங்களும், செலவுகளும் அதிகரிக்கும். கல்யாணம், கிரகப்பிரவேசம், சீமந்தம் என வீடு களைகட்டும். விலகிச் சென்ற பழைய சொந்த பந்தங்கள் இனி தேடி வருவார்கள். 14.12.2017 வரை ராசிக்கு 4-ம் வீட்டில் சனி அமர்ந்திருப்பதால் தாயாருக்கு நரம்புக் கோளாறு, ரத்த அழுத்தம் வரும்.
தாய்வழி உறவினர்களால் அலைச்சலும், மனக்கசப்பும் வந்து நீங்கும். தாய்வழி சொத்தை விற்று புது சொத்து வாங்குவீர்கள். நெடுந்தூர, இரவு நேரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. கெட்ட பழக்க வழக்கங்களுக்கு அடிமையாகி விடாதீர்கள். ஜுலை 26-ம் தேதி வரை ராசிக்கு 7-ல் கேதுவும், உங்கள் ராசிக்குள்ளேயே ராகுவும் நிற்பதால் மூச்சுத் திணறல், ஹார்மோன் பிரச்சினை, அல்சர், இரத்த சோகை வந்து செல்லும். கணவன், மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து விலகும். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போங்கள்.

முன்கோபத்தைக் குறையுங்கள். மனைவிக்கு மாதவிடாய்க் கோளாறு, கர்ப்பப்பையில் நீர்க் கட்டி, நரம்புச் சுளுக்கு வந்து நீங்கும். பழைய இழப்புகள், ஏமாற்றங்களை நினைத்து வருத்தப்படுவீர்கள். 27.7.2017 முதல் ராகு 12-ம் வீட்டிலும், கேது 6-ம் வீட்டிலும் தொடர்வதால் மனப்போராட்டங்கள் ஓயும். பிரிந்திருந்த கணவன், மனைவி ஒன்று சேருவீர்கள். நோய்களெல்லாம் விலகும். தோற்றப் பொலிவு கூடும். சோர்ந்துப் போய் கலையிழந்திருந்த உங்கள் முகத்தில் இனி புன்னகை மலரும். கோவில் கும்பாபிஷேகத்தை எடுத்து நடத்துவீர்கள். தள்ளிப் போன வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். பழைய கடன் பிரச்சினை கட்டுப்பாட்டிற்குள் வரும்.

ஷேர் மூலம் பணம் வரும். பதவிகள் தேடி வரும். வெளிவட்டாரத்தில் உங்களை எதிர்த்தவர்களெல்லாம் அடங்குவார்கள். வேற்றுமதத்தவர், வெளிநாட்டிலிருப்பவர்களால் ஆதாயமடைவீர்கள். சொந்த ஊர் திருவிழாக்களை முன்னின்று நடத்துவீர்கள். புது வேலையும் அமையும். புத்தாண்டின் தொடக்கம் முதல் 01.09.2017 வரை குரு உங்கள் ராசிக்கு தனஸ்தானத்தில் அமர்ந்திருப்பதால் எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். குடும்பத்தாரின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு, அதற்கேற்ப வளைந்து கொடுப்பீர்கள்.

ஆடை, ஆபரணம் சேரும். வழக்குகள் சாதகமாக முடியும். நீண்ட நாளாக செல்ல வேண்டுமென்று நினைத்திருந்த அண்டை மாநிலப் புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். ஆனால் 02.09.2017 முதல் குரு 3-ம் வீட்டிலேயே அமர்வதால் எந்த ஒரு காரியத்தையும் முதல் கட்டத்திலேயே முடிக்க முடியாமல் மூன்றாவது முயற்சியில் போராடி முடிக்க வேண்டி வரும். இளைய சகோதர வகையில் மனத்தாங்கல் வரும். முன்பின் தெரியாதவர்களிடம் உங்களுடைய குடும்ப விஷயங்களைப் பகிர்ந்துக் கொள்ள வேண்டாம்.

பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம், திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் சற்று தாமதமாகி முடியும். கர்ப்பிணிப் பெண்கள் எடைமிகுந்த பொருட்களை சுமக்க வேண்டாம். வங்கிக் காசோலையில் முன்னரே கையொப்பமிட்டு வைக்க வேண்டாம். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். வியாபாரத்தில் புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்துவீர்கள். சந்தை நிலவரத்தை அறிந்து அதற்கேற்ப முதலீடு செய்து வாடிக்கையாளர்களை கவர்வீர்கள். உத்யோகத்தில் வேலையில் ஆர்வம் அதிகரிக்கும்.
குடும்பத்தினருக்கு
இந்த வருடம் முழுக்க சனியின் வீீச்சு சரியில்லாததால் தான் அடிக்கடி குடும்பத்தில் சண்டை, சச்சரவு மருத்துவ செலவுகள் அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது. அதிலிருந்து விடுபட அருகிலிருக்கும் சிவாலயத்திலுள்ள பைரவரை அஷ்டமி திதியில் சின்ன பூசணிக்காயில் நல்லெண்ணெய் விட்டு தீபம் ஏற்றுங்கள். உங்கள் குடும்பத்தில் மேஷம், துலாம் விருச்சிகம், தனுசு ராசியில் கணவரோ, பிள்ளைகளோ இருந்தால் பாதிப்புகள் அதிகமாகும். ஆனால் ரிஷபம், மிதுனம், கன்னி ராசியில் இருந்தால் யோகப் பலன் கிடைக்கும். மேலும் குடும்பத்தில் செல்வம் செழிக்க கிடைக்க கீழ்கண்ட கேது கிரகத்தின் சூட்சமமந்திர வடிவத்தை பூஜையறையில் மாகோலமிட்டு வியாழக்கிழமைகளில் வணங்கி வாருங்கள்.

கன்னி

நுணுக்கமாகவும், துல்லியமாகவும் யோசிப்பவர்களே! தைரியஸ்தானமான 3-ம் வீட்டில் சனிபகவான் வலுவாக அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்த புத்தாண்டு பிறப்பதால் திடீர் யோகங்களை அனுபவிப்பீர்கள். சவாலான காரியங்களையும் சாதாரணமாக முடித்துக் காட்டுவீர்கள். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். எதிர்பார்த்த விலைக்கே பழைய சொத்தை விற்பீர்கள். பெரிய மனிதர்கள், வெற்றி பெற்றவர்களின் நட்பு கிடைக்கும். இந்தாண்டு பிறக்கும் போது செவ்வாய் 6-ல் இடத்திலும், சூரியன் 4-லும் வலுவாக அமர்ந்திருப்பதால் எதிலும் வெற்றி பெறுவீர்கள். அரசால் அனுகூலம் உண்டாகும். புதிதாக சொத்து வாங்குவீர்கள். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். திடீர் பயணங்கள் உண்டு.

26.7.2017 வரை உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டில் கேது பகவான் நிற்பதால் எதிர்ப்புகள் அடங்கும். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். உங்களிடம் பழகும் நண்பர்கள், உறவினர்களின் பலம், பலவீனத்தை உணர்வீர்கள். மகான்கள், ஆன்மிகவாதிகளைச் சந்தித்து ஆசி பெறுவீர்கள். வெளிவட்டாரத்தில் பெருமையாகப் பேசப்படுவீர்கள். ஆனால் ராசிக்கு 12-ம் வீட்டில் ராகு நிற்பதால் மற்றவர்களுக்காக ஜாமீன் கையெழுத்திடாதீர்கள். பழைய கடனை நினைத்து அவ்வப்போது அச்சம் வரும். சுபச் செலவுகள் அதிகமாகும். கட்டிட வேலைகளைத் தொடங்குவீர்கள். வங்கி லோன் கிடைக்கும். 27.7.2017 முதல் கேது 5-ம் வீட்டில் அமர்வதால் முடிவுகள் எடுப்பதில் தயக்கம், தடுமாற்றம் வந்து போகும். பிள்ளைகளுக்கு அதிக அறிவுரைச் சொல்லி நெருக்கடிக்குள்ளாக்காதீர்கள்.

கர்ப்பிணிப் பெண்கள் தூரத்துப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. பூர்வீக சொத்துப் பிரச்னை வெடிக்கும். ஆனால் ராகு 11-ம் வீட்டில் நீடிப்பதால் பெரிய திட்டங்கள் நிறைவேறும். வெற்றி பெற்ற மனிதர்களின் நட்பு கிடைக்கும். திடீர் பணவரவு உண்டு. உங்களுடைய உழைப்பிற்கு ஏற்ற பலன் கிட்டும். அயல் நாடு செல்லும் வாய்ப்பு வரும். குடும்பத்தினருடன் சுற்றுலாப் பயணம் சென்று வருவீர்கள். உறவினர்கள், விருந்தினர்களின் வருகையால் வீடு களைகட்டும். திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு கூடி வரும். புத்தாண்டின் தொடக்கம் முதல் 01.09.2017 வரை உங்கள் ராசியிலேயே குரு அமர்ந்து ஜென்ம குருவாக தொடர்வதால் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.

கணவன், மனைவிக்குள் வீண் சந்தேகம், ஈகோ பிரச்னையை தவிர்க்கப் பாருங்கள். பிரிவுகள் வரக்கூடும். தண்ணீரை காய்ச்சி அருந்துங்கள். உங்களைப் பற்றிய வதந்திகளை சிலர் பரப்புவார்கள். கொழுப்புச் சத்து அதிகமுள்ள உணவுகள், கார உணவுகள் மற்றும் லாகிரி வஸ்துக்களை தவிர்ப்பது நல்லது. 02.09.2017 முதல் குரு 2-ம் வீட்டில் சென்று அமர்வதால் எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளெல்லாம் அடுத்தடுத்து நடந்தேறும். சிலர் புது வீடு கட்டி குடிப்புகுவீர்கள். குடும்பத்தில் நிலவி வந்த கூச்சல், குழப்பம் விலகும். பிரிந்திருந்தவர்கள் ஒன்று சேருவீர்கள். அழகு, அறிவுள்ள குழந்தை பிறக்கும். மனைவிக்கு இருந்து வந்த ஆரோக்கிய குறைவு சீராகும்.

வழக்கால் இருந்த நெருக்கடிகள் நீங்கும். சொத்துச் சேர்க்கை உண்டு. சொந்த ஊர் பொதுக் காரியங்களையெல்லாம் முன்னின்று நடத்தி வைப்பீர்கள். விலை உயர்ந்த ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். எப்படியாவது ஒரு சொத்து வாங்கிவிட வேண்டுமென்று முயற்சி செய்வீர்கள், அந்த முயற்சியும் நல்ல விதத்தில் முடியும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். மக்களின் ரசனையைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப புதிய சரக்குகள் கொள்முதல் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் ஓரங்கட்டி ஒதுக்கப்பட்டிருந்த உங்களுக்கு செப்டம்பர் மாதம் முதல் முக்கியத்துவம் கிடைக்கும். அதிகாரிகளுடன் அரவணைத்துப் போகும் இயல்பு உண்டாகும்.
குடும்பத்தினருக்கு
ஆகஸ்ட் வரை ஜென்ம குருயிருப்பதால் கணவருடன் ஈகோ பிரச்சினை, மாமியார், மாமனாருடன் பனிப்போர் இவைகளையெல்லாம் சந்தித்துக் கொண்டிருக்கிறீர்கள். அந்த பிரச்சினையிலிருந்து விடுபட சதுர்த்தி திதியில் அருகம்புல் வைத்து விநாயகர வழிபடுங்கள். உங்கள் குடும்பத்தில் மேஷம், சிம்மம், தனுசு, கும்ப ராசியில் கணவரோ, பிள்ளைகளோ இருந்தால் பாதிப்புகள் அதிகமாகும்.

ஆனால் ரிஷபம், கடகம், மகரம், மீன ராசியில் இருந்தால் யோகப் பலன் கிடைக்கும். மேலும் குடும்பத்தில் உள்ளவர்கள் நல்ல நிலைமைக்கு வர கீழ்கண்ட சனி கிரகத்தின் சூட்சமமந்திர வடிவத்தை பூஜையறையில் மாகோலமிட்டு சனிக்கிழமைகளில் வணங்கி வாருங்கள்.

Post a Comment

1 Comments

  1. வணக்கம்,
    என் பெயர் மரியன் சேவிக்,
     இங்கே ஒரு கடனைத் தேடிக்கொண்டவர்களுக்கு இந்த நடுத்தரத்தைப் பயன்படுத்த விரும்புகிறேன்.
     நான் சுமார் 300 மில்லியன் ரூபா கடனை கடனாக பெற்றுக்கொண்டேன். கடனைப் பெறாமல் 20 மில்லியன் ரூபாய் இழந்தது.
    நான் இரண்டு வெவ்வேறு பெண்கள் இரண்டு முறை திருப்பி
    ஐக்கிய நாடுகள், இன்னும் என் கடன் பெறவில்லை, நான் கிட்டத்தட்ட இறந்துவிட்டேன், என் வணிக செயல்முறை அழிக்கப்பட்டது.
    ஜனவரி 2017 ஜனவரியில், கடவுளுக்கு மகிமை உண்டாகட்டும், ஒரு கடன் வாங்குபவர், திருமதி இவானா லுக்காவுக்கு என்னை அறிமுகப்படுத்திய ஒரு நண்பரை நான் சந்தித்தேன், அவள் கடன் நிறுவனத்தில் கடன் வாங்க எனக்கு உதவியது. எனது அடையாள அட்டையின் நகல் மற்றும் எனது கணக்கு விவரங்கள் சமர்ப்பிக்கப்பட்டபின் எனது கடனை ஏற்றுக் கொண்டேன், அது நம்பமுடியாததாக இருந்தது, மற்றவர்களுடைய அதே பணத்தை நான் எடுத்துக் கொண்டேன் என்று நினைத்தேன், நான் மீண்டும் அவற்றைப் பற்றி கேள்விப்பட்டதே இல்லை. சுமார் ஒரு மணி நேரத்திற்குள் கடன், "ஆம்" என் வங்கியில் இருந்து ஒரு விழிப்புணர்வு என் கணக்கில் ஒரு வைப்பு இருந்தது என்று நான் எடுத்துக் கொண்டேன்.
     .
     பல கடத்தல்காரர்கள் அங்கு இருப்பதாக ஆலோசனை செய்ய இந்த வாய்ப்பை நான் பயன்படுத்த விரும்புகிறேன், எனவே நீங்கள் ஒரு கடனைத் தேவைப்பட்டால், கடனாக கடன் வாங்க விரும்பினால், திருமதி இவானா லுக்கா மூலம் பதிவு செய்யலாம் மற்றும் நீங்கள் மின்னஞ்சல் மூலம் அவளை தொடர்பு கொள்ளலாம்: (ivanaluka04@gmail.com ). என் மின்னஞ்சல் மூலம் என்னை தொடர்பு கொள்ளலாம்: (mariansavic271@gmail.com)
    உங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால். அதன்
     உண்மையான, நீங்கள் செய்ய வேண்டிய அனைத்து வழிமுறைகளையும் விண்ணப்ப செயல்முறைகளையும் பின்பற்றவும்.
    தாய் ஒரு தகுதியுடைய கடன், நான் தேவைப்பட்டபோது எனக்கு உதவினார், அதனால்தான் நான் அவளது நல்ல செயல்களைப் பற்றி சாட்சி கூறுகிறேன்
    நன்றி.

    ReplyDelete

அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..

நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை

Ad Code

Responsive Advertisement