நீதிபதிகளுக்கான நேர்முக உதவியாளர் பணி நேர்காணல் வரும் 10ம் தேதி தொடங்கும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. டிஎன்பிஎஸ்சி நேற்று வெளியிட்ட அறிவிப்பு:
சென்னை உயர்நீதிமன்றப் பணிகளில் அடங்கிய நீதிபதிகளுக்கான நேர்முக உதவியாளர்-92, பதிவாளர்களுக்கான நேர்முக உதவியாளர்-7 மற்றும் துணைப்பதிவாளர்களுக்கான நேர்முக எழுத்தர்-2 ஆகிய பதவிகளுக்கு கடந்த ஆகஸ்ட் 27ம் தேதி எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது. இதில் 310 பேர் கலந்து கொண்டு தேர்வு எழுதினர்.
தேர்வில் விண்ணப்பதாரர் பெற்ற மதிப்பெண்கள், இடஒதுக்கீட்டு விதி மற்றும் பதவிக்கான அந்த அறிவிப்பில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில் நேர்காணலுக்கு தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்ட 178 பேரின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான நேர்காணல் வருகிற ஜனவரி 10, 11, 12 ஆகிய நாட்களில் தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெறும். இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை