ஆசிரியர் பணிக்கான வழிகாட்டி நெறிமுறைகள் தொடர்பாக சிபிஎஸ்இ செயலாளர் ஜோசப் இம்மானுவேல் அனைத்து சிபிஎஸ்இ பள்ளிகளின் முதல்வர் களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
ஆசிரியர்கள் கல்வி பணி அல்லாத இதர பணிகளிலும் ஈடுபடுத்தப்படுவதாக கடந்த அக் டோபர் 25-ம் தேதி நடைபெற்ற மத்திய கல்வி ஆலோசனை வாரிய கூட்டத்தில் பல்வேறு மாநிலங்களின் பிரதிநிதிகள் புகார் எழுப்பினர். இதை கருத்தில் கொண்டு ஆசிரியர்கள் கற்பித்தல் பணி அல்லாத வேறு பணிகளில் ஈடுபடுத்தப்படவில்லை என்பது சிபிஎஸ்இ பள்ளிகள் உறுதிபடுத்த வேண்டும். அலுவலகப்பணி, போக்குவரத்து, கேன்டீன் நிர் வாகம் உள்ளிட்ட இதர பணிகளை செய்வதற்கு அதற்கென பயிற்சி பெற்ற பணியாளர்களை பள்ளிகள் ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும்.இவ்வாறு அந்த சுற்றறிக்கை யில் கூறப்பட்டுள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை