சேலம், பெரியார் பல்கலையில், 2001ல்,தொலைதூர கல்வி மையமான பிரைடு துவங்கப்பட்டது.
அதில், இளங்கலை, முதுகலை, டிப்ளமோ,சான்றிதழ் உள்ளிட்ட, 150 படிப்புகள் வழங்கப்படுகின்றன. தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 188, அண்டை மாநிலங்களில், 105,அண்டை நாடுகளில், மூன்று என, 295 படிப்பு மையங்கள் செயல்படுகின்றன.
எச்சரிக்கை:
அதில், அண்டை நாடுகள் மற்றும் மாநிலங்களில் உள்ள படிப்பு மையங்களை நடத்தக்கூடாது என,யு.ஜி.சி., உத்தரவிட்டது.
மேலும், விதிக்கு மாறாக, தனியார் நிறுவனங்களுடன் இணைந்து, படிப்புகளை வழங்கியதால், பெரியார் பல்கலை தொலைதூர படிப்புகளில், மாணவர்கள் சேர வேண்டாம் என, சில மாதங்களுக்கு முன், யு.ஜி.சி.,எச்சரித்தது.
ஆதரவு:
இதனால், பெரியார் பல்கலை, தொலைதூர கல்வியில் மாணவர் சேர்க்கை நிறுத்தப்பட்டது. பல்கலை சார்பில், நடப்பு கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்குமாறு, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அதில், பல்கலைக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், அதனால், நடப்பு கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை துவங்கப்பட்டுள்ளது என, பல்கலை அறிவித்துள்ளது.
தொடரலாம்:
பிரைடு இயக்குனர் பாலகுருநாதன் கூறுகையில், மற்ற பல்கலைகளில் பின்பற்றும் விதிமுறைப்படி,பெரியார் பல்கலையில், நடப்பாண்டுக்கான மாணவர் சேர்க்கையை தொடரலாம் என, தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதனால், பெரியார் பல்கலை, தொலைநிலை கல்வி மையத்தில், நடப்பாண்டுக்கான மாணவர் சேர்க்கை துவங்கியது, என்றார். தொலைநிலை கல்வியில் மாணவர் சேர்க்கை நடத்த, பல்கலை மானியக்குழு விதித்த தடைக்கு, பெரியார் பல்கலை, நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்றதால், நடப்பு கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை துவங்கியுள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை