அதிவேக இணைய இணைப்பு தரும் திட்டத்தில், முகவர்களை சேர்ப்பதில், அரசு கேபிள், 'டிவி'
நிறுவனம், தீவிரம் காட்டி வருகிறது. அரசு கேபிள் நிறுவனம், 'பிராட் பேண்ட்' என்ற, அதிகவேக இணைய இணைப்பு திட்டத்தை, மாவட்ட தலைநகரங்களில் செயல்படுத்தி வருகிறது; அதை, அனைத்து நகராட்சிகளுக்கும் விரிவுபடுத்த உள்ளது.
இந்நிலையில், விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்தவர்களை மட்டுமின்றி, இணையதளத்தை பார்த்தவர்களையும் விடாமல், முகவர்களாக சேரும்படி, அரசு கேபிள் ஊழியர்கள் கூறி வருகின்றனர். சென்னையில் உள்ள, கேபிள், 'டிவி' அலுவலகத்தில், இதற்காகவே ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து, அதிகாரிகள் கூறுகையில், 'பி.எஸ்.என்.எல்., கட்டணத்தை விட குறைவாக நிர்ணயித்துள்ளோம். இத்தொழிலில், நல்ல எதிர்காலம் உள்ளது; இளைஞர்கள் நம்பி வரலாம்' என்றனர்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை