தமிழக அரசின் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:
அரசு ஊழியர்கள் புதிய பாஸ் போர்ட் பெறவோ, ஏற்கெனவே உள்ளபாஸ்போர்ட்டை புதுப்பிக் கவோ விரும்பினால், அரசிடம் இருந்து
அடையாளச் சான்றிதழ், தடையின்மை சான்றிதழ் பெற வேண்டும். இதற்கான விண்ணப்பம் தொடர்பாக, தமிழ்நாடு அரசுப் பணியாளர் நடத்தை விதிகள் ஏற்கெனவே திருத்தப்பட்டுள்ளது.இந்த நிலையில், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் சமீபத்தில் ஒரு கடிதம் எழுதியது. அதில், புதிய பாஸ்போர்ட் அல்லது பாஸ்போர்ட் புதுப்பிக்க, சம்பந்தப்பட்ட அரசு ஊழியர் முன் தகவல் கடிதம் ஒன்றை வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
அதற்கான விண்ணப்பத்தையும் மத்திய அரசு வெளியிட்டுள்ளது.எனவே, தமிழக அரசு ஊழியர் கள் ஏற்கெனவே உள்ள விண்ணப் பத்துடன், முன் தகவல் கடிதத் துக்கான விண்ணப்பத்தையும் சேர்த்து அளிக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கேற்ப தமிழ்நாடு அரசுப் பணியாளர் நடத்தை விதிகள் திருத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை