'தேசிய இளைஞர் விழாவில், தமிழகம் சார்பில் பங்கேற்க விரும்புவோர், நவ., 15க்குள் விண்ணப்பிக்க வேண்டும்' என, தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அறிவித்துள்ளது.
ஹரியானா மாநிலம், ரோதக் நகரில், 21வது தேசிய இளைஞர் விழா, ஜன., 12 முதல், 16 வரை நடைபெற உள்ளது. இவ்விழாவில் பங்கேற்க, நாட்டுப்புற நடனம், ஓரங்க நாடகம், சங்கீதம், பேச்சு போட்டி, பரத நாட்டியம், இசைக்கருவிகள் இசைத்தல் உள்ளிட்டவற்றில் சிறந்து விளங்கும், 100 பேர், தமிழகம் சார்பில், அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.இதில், 'தகுதியுள்ள, 13 முதல், 25 வயதிற்குட்பட்ட, ஆண்கள், பெண்கள் பங்கேற்கலாம்.
இதற்கான விண்ணப்பம், www.sdat.tn.gov.in என்ற இணைய தளத்தில் உள்ளது. பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, வரும், 15க்குள், ywtnadu@gmail.com என்ற, 'இ - மெயில்' முகவரிக்கு அனுப்ப வேண்டும்' என, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அறிவித்துள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை