Ad Code

Responsive Advertisement

மருத்துவ காலி பணியிடங்களை நிரப்ப ஜனவரியில் தேர்வு : அமைச்சர் தகவல்...

தமிழக மருத்துவமனைகளில் காலியாக உள்ள மருத்துவர் பணியிடங்களுக்கான தேர்வு, வரும் ஜனவரியில் நடைபெறும்,'' என, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

புதுக்கோட்டையில், நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
புதுக்கோட்டையில், 249 கோடி ரூபாய் மதிப்பில், மருத்துவக் கல்லுாரி கட்டடம் கட்டப் பட்டு வருகிறது. பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு இந்தாண்டு, இந்திய மருத்துவக் கவுன்சில் ஒப்புதலை பெற்று திறக்கப்படும். வரும் கல்வியாண்டில் மாணவர்கள் சேர்க்கை நடக்க உள்ளது.
தமிழக மருத்துவமனைகளில் காலியாக உள்ள மருத்துவர்களின் பணியிடங்கள், அவ்வப்போது நிரப்பப்பட்டு வருகின்றன. அதன்படி, வரும் ஜனவரியில் தேர்வு நடத்தப்பட்டு, காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.உடன் இருந்த, தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:தமிழகத்தில், 'எய்ம்ஸ்' மருத்துவமனை அமைப்பதற்கு, மத்திய குழு, ஐந்து இடங்களை பார்வையிட்டு சென்றுள்ளது. இந்த இடங்களில், எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யும் பணிகளில், மத்திய சுகாதாரத்துறை ஈடுபட்டு வருவதாக, தமிழக அரசிற்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement