சென்னை கலெக்டர் மகேஸ்வரி வெளியிட்ட செய்தி குறிப்பு: வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து தொடர்ச்சியாக அதை புதுப்பித்து வருபவர்களுக்கு மாதந்தோறும் உதவித்தொகையாக, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவருக்கு மாதம் ரூ.150ம், பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவருக்கு மாதம் ரூ.200ம், பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.300ம் உதவித்தொகை வழங்கப்படுகிறது.
இவர்கள், ஐந்தாண்டுகளுக்கு மேல் பதிவு செய்து வேலைக்காக காத்திருப்பவராக இருக்க வேண்டும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 45 வயதுக்கு மிகாமலும், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் இதர வகுப்பினர் 40 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
குடும்ப ஆண்டு வருமானம் ரூ.50,000க்கு மிகாமல் இருக்க வேண்டும். மேற்கண்ட தகுதி உள்ள இளைஞர்கள் சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், சாந்தோம், சென்னை-4 என்ற முகவரியில் விண்ணப்ப படிவங்களை பெற்று பயன் அடையலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை