Ad Code

Responsive Advertisement

போஸ்ட்மேன் வேலை நவ., 15 கடைசி

'தமிழகத்தில், காலியாக உள்ள, 310 போஸ்ட்மேன்கள், மெயில் கார்டு பணி இடங்களுக்கு, நவ., 15க்குள், விண்ணப்பிக்கலாம்' என, அஞ்சல்துறை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக, அஞ்சல் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு: 

தமிழக அஞ்சல் வட்டத்தில், 304 போஸ்ட் மேன்கள்; ஆறு மெயில் கார்டுகள் என, காலியாக உள்ள, 310 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு, பிளஸ் 2 முடித்தோர், ஆன்லைன் வழியே, நவ., 15க்குள் விண்ணப்பிக்கலாம். 21 ஆயிரம் ரூபாய் முதல், 69 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் கிடைக்கும். பொது பிரிவினருக்கும், மற்ற பிரிவினருக்கும், அரசாணைகளின்படி, வயது வரம்பு சலுகை வழங்கப்படும்.

வயது வரம்பு, 2016, நவ., 15ஐ அடிப்படையாக கொண்டு கணக்கிடப்படும். விண்ணப்பங்கள் பெறவும், மேலும் விபரங்களுக்கும், www.dopchennai.in என்ற இணையதளத்தை பார்க்கலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement