'தினமலர்' நாளிதழின், மாணவர் பதிப்பான, 'பட்டம்' தனி இதழ் வெளியீட்டு விழா, சென்னை சேலையூர் சீயோன் பள்ளியில் நேற்று நடந்தது. 'தினமலர் - பட்டம்' இதழ் தினசரியாக, திங்கள் முதல் வெள்ளி வரை வெளியாகிறது.
பள்ளியின் தாளாளர் விஜயன் பேசியதாவது: மாணவர் ஒவ்வொருவரிடமும், தனித்திறமைகள் புதைந்து கிடக்கின்றன. அதை வெளிக் கொண்டு வர, செய்தித்தாள்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றன. பள்ளி படிப்புடன், 50 சதவீதம் பொது அறிவு இருந்தால் தான், ஐ.ஏ.எஸ்., ஆக முடியும். நம்மை சுற்றி நடக்கும் விஷயங்களை, நாளிதழ்கள் தான், நமக்குச் சொல்கின்றன. புது முயற்சியாக, மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, மாணவர்கள் பதிப்பு பட்டம் என்ற தனி இதழை, 'தினமலர்' நாளிதழ் கொண்டு வந்திருப்பது மிகவும் மகிழ்ச்சிஅளிக்கிறது. மூளைக்கு வேலை கொடுக்கும் இதழாக, பட்டம் இருப்பதை உணருகிறேன். இது, மாணவர்களை அடுத்த நிலைக்கு கொண்டு செல்லும். இவ்வாறு அவர் பேசினார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை