பிளஸ் 2 தேர்வில் சர்ச்சைக்குள்ளான பள்ளிகளின் தேர்வு மையங்களை ரத்து செய்ய, அரசு தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது.தமிழகத்தில், அரசு தேர்வுத்துறை மூலம், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இதில், ஒவ்வொரு ஆண்டும், 18 லட்சம் பேர் வரை பங்கேற்கின்றனர்.
முறைகேட்டில் சிக்கும் தேர்வு மையங்களில் கண்காணிப்பாளர்களாக இருக்கும் அரசு பள்ளி ஆசிரியர்கள், தனியார் பள்ளிகளிடம் கையூட்டு பெற்று, முறைகேட்டில் ஈடுபடுவது, கடந்த தேர்வுகளின் போது கண்டறியப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு முன், கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 'வாட்ஸ் ஆப்' மூலம் கணித வினாத்தாள் வெளியானது; இதில், கல்வித்துறை அதிகாரிகளே சிக்கினர்.
கடந்த ஆண்டு, இதுபோன்ற முறைகேடுகள் கண்டறியப்படவில்லை. ஆனாலும், விடைத்தாள் திருத்தத்தில், ஈரோட்டில் உள்ள பிரபல பள்ளி மாணவர்கள் ஐந்து பேருக்கு, ஆசிரியர் ஒருவரே தேர்வு எழுதியது கண்டுபிடிக்கப்பட்டது; அந்த மாணவர்களின் தேர்வு ரத்து செய்யப்பட்டு, முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், நடப்பு கல்வி ஆண்டு பொதுத்தேர்வுக்கான பணிகளை தேர்வுத்துறை துவக்கியுள்ளது. தேர்வு மையங்களை பட்டியலிடும் நடவடிக்கைகளும் துவங்கி உள்ளன. இதில், சர்ச்சைக்குரிய தனியார் பள்ளிகளின் தேர்வு மையங்களை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு தனியார் பள்ளியின் தேர்வு மையம், ஏற்கனவே ரத்து செய்யப்பட்டு விட்டது. மற்ற மாவட்டங்களில், அதிக அளவில் மாணவர்கள், 'பிட்' அடிக்க உதவுவது, கண்காணிப்பு பணிக்கு செல்லும் ஆசிரியர்களுக்கு, உணவு மற்றும் பரிசு அளித்து கவனிக்கும் பள்ளிகளின் பட்டியல் தயாரிக்கப்படுவதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை