பிளஸ் 2வில், 75 சதவீத மதிப்பெண் பெற்றால் மட்டுமே நுழைவுத்தேர்வு எழுத முடியும் என்பதால், தமிழக மாணவர்கள், ஐ.ஐ.டி.,யில் சேர பிரகாசமான வாய்ப்பு உருவாகியுள்ளது.
பிளஸ் 2 முடித்தோர், மத்திய அரசின் உயர்கல்வி தொழில்நுட்ப நிறுவனமான, ஐ.ஐ.டி.,யில், பி.இ., - பி.டெக்., படிப்பில் சேர, ஜே.இ.இ., என்ற ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
இத்தேர்வுக்கு, பிளஸ் 2 தேர்ச்சி போதும் என்ற நிலை இருந்தது. இந்த ஆண்டு முதல், பிளஸ் 2வில், மொத்த மதிப்பெண்ணில், 75 சதவீதம் அல்லது அதிகபட்ச முதல் மதிப்பெண்ணில், 75 சதவீதம் எடுத்தால் மட்டுமே, ஜே.இ.இ., தேர்வை எழுத முடியும்.பொதுவாக, சி.பி.எஸ்.இ., மாணவர்களை விட, தமிழக சமச்சீர் கல்வி மாணவர்கள், பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறுவது வழக்கம்.
எனவே, இந்த ஆண்டு அமலாகும் புதிய முறையால், தமிழக மாணவர்கள் பலர், ஐ.ஐ.டி., நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்று, பி.இ., - பி.டெக்., படிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, அரசு பள்ளி களிலும், மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் அளிக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை