சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்கள் அச்சிடும் பணியை, பிற மாநிலங்களுக்கு வழங்குவதை நிறுத்த, தமிழக பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. தமிழகத்தில், சமச்சீர் கல்வித் திட்டம், 2011ல் அமலுக்கு வந்தது.
பின், ஆந்திரா அச்சகர்கள், அதிக புத்தகங்களை அச்சிட்டனர்.நடப்பு ஆண்டில், வண்ணம் இல்லாத கறுப்பு, வெள்ளை நிறம் உடைய, பிளஸ் 2 புத்தகங்களுக்கு, அச்சுக்கூலி குறைக்கப்பட்டதால், புத்தகங்களை அச்சிட, ஆந்திரா அச்சகர்கள் மறுத்து விட்டனர். அதிர்ச்சி அடைந்த பாட நுால் கழகம், நிலைமையை சமாளிக்க, தமிழக அச்சகர்களின் உதவியை நாடியது. தமிழக அச்சகர்களும், விலையை பற்றி கவலைப்படாமல், மூன்று பருவத்திற்கான புத்தகங்களை அச்சிட்டுள்ளனர்.
பிற மாநிலங்களில், அந்தந்த மாநில அச்சகர்களுக்கே, பாடப் புத்தகங்கள் அச்சிடும் பணி தரப்படுகிறது. தமிழக புத்தகங்களுக்கு, தமிழக அச்சகங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என, அச்சகர்கள் கோரி வந்தனர். வெளி மாநிலங்களில் அச்சிட கொடுப்பதால், போக்குவரத்து செலவு அதிகமாவதை உணர்ந்த பாட நுால் கழகமும், பிற மாநிலங்களை விட, தமிழக அச்சகங்களே சிறந்தவை என, முடிவுக்கு வந்துள்ளது.
இதற்காக, பாடப் புத்தக அச்சடிப்பு குறித்த அரசாணையை திருத்த, ஆலோசனை நடந்து வருகிறது. இது தொடர்பாக, தமிழக அச்சக உரிமையாளர்களை அழைத்து, கல்வித்துறை அதிகாரிகள் விரைவில் பேச்சு நடத்த உள்ளனர்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை